கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில்.. பூட்டப்பட்ட காரில் இளம்பெண்.. இப்படியொரு காதலா? யாரந்த 3 பேர்?
கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. இது தொடர்பாக அங்கிருக்கும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 29 வயதாகிறது.. இவருக்கு கடந்த 2022ல் திருமணம் நடந்தது.. ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து வந்துவிட்டார். தற்போது தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்னொரு நபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அந்த நபருக்கு ஏற்கனவே கல்யாணமாகி, 2 குழந்தைகளும் இருக்கிறார்களாம்.. எனினும், இளம்பெண்ணுடன் நெருங்கி பழகியிருக்கிறார். தனித்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு, இந்த நபரின் நட்பும், உறவும் ஆறுதலாக இருந்து வந்தது.
கண்ணீர்: ஒருகட்டத்தில், இளம்பெண்ணுடன் பேசுவதையும், பழகுவதையும் அந்த நபர் நிறுத்திவிட்டார். இதனை இளம்பெண்ணால் ஜீரணிக்கவே முடியவில்லை.. அந்த நபரை பிரிய முடியாமல் தவித்துள்ளார்... அப்போதுதான் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி (28), ஆறுமுகம், சதீஷ் ஆகியோரின் அறிமுகம் பெண்ணுக்கு கிடைத்திருக்கிறது. அவர்களிடம் தன்னுடைய காதலன் தன்னிடம் பழகுவதை நிறுத்திவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக சொல்லி அழுதுள்ளார் இளம்பெண்.
இதைக்கேட்டதும் வருத்தப்பட்ட கார்த்தியும் அவரது நண்பர்களும், "காதலனிடம் எப்படியாவது பேசி உன்னுடன் சேர்த்து வைக்கிறோம்.. 20 லட்ச ரூபாய் தந்தால் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருக்க தேவையான ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம்" என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
பஸ் ஸ்டாப்: இதைக்கேட்டதுமே இளம்பெண்ணுக்கு மகிழ்ச்சியாகிவிட்டது.. எப்படியாவது காதலன் தன்னுடன் சேர்ந்துவிட்டால் போதும் என்று நினைத்து, முதல் கட்டமாக 10.50 லட்ச ரூபாய் தருவதாகவும், காதலன் தன்னிடம் வந்து சேர்ந்ததுமே மீதமுள்ள பணத்தை தருவதாகவும் சொல்லி உள்ளார்.. அதன்படியே, நேற்று முன்தினம் 10.50 லட்சம் ரூபாய் பணத்துடன், சேரன் நகர் பஸ் ஸ்டாப்புக்கு வந்துள்ளார்.
அங்கே கார்த்தி உட்பட 3 நண்பர்களும் காரில் வந்தார்கள்.. இளம்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு, மேட்டுப்பாளையம் ரோட்டிற்கு அழைத்து சென்றனர்... கவுண்டம்பாளையம் அருகே சென்றபோது 3 பேரும் இளம்பெண்ணிடம் பணத்தை கேட்டனர். அதற்கு அவர், "என் காதலன் வந்தால்தான் பணத்தை தருவேன்" என்று சொல்லிவிட்டார்..
தப்பி ஓட்டம்: இதைக்கேட்டதும் 3 பேரும் ஆத்திரமடைந்து, கத்தியை காட்டி பெண்ணை மிரட்டினார்கள்.. அவரது கையிலிருந்த ரூ.10.50 லட்சத்தை பறித்துக்கொண்டு காரில் இருந்து அவரை இறக்கிவிட்டு தப்பிவிட்டார்கள்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், கவுண்டம்பாளையம் போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளார்.. போலீசாரும் இந்த வழக்கை பதிவு செய்து, தப்பிச்சென்ற 3 பேரையும் தேடி வருகிறார்களாம்..!!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications