பூப்பெய்திய மாணவி வாசலில் தேர்வெழுத வைத்த விவகாரம்.. பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு
கோவை: கோவை, செங்குட்டைபாளையத்தில் பூப்பெய்திய பட்டியலின மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஏப்ரல் 5 ஆம் தேதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில், தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார்.

ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனை சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பேசு பொருளாகியுள்ளது.
மாணவியை வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் ஏ.எஸ்பி. சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், பள்ளி முதல்வரை சஸ்பெண்டு செய்து பள்ளியின் தாளாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு கல்வித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாணவியின் தந்தை சுரேந்திரராஜ் அளித்த புகாரின் பேரில், பள்ளி முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி மற்றும் தாளாளர் தங்கவேல் பாண்டியன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெகமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் காவல் துறையினர் பள்ளியில் நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடமும், மாணவியின் பெற்றோரிடமும் உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த சம்பவத்தில் தீண்டாமை கொடுமை இல்லை என ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில், தற்போது பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் உட்பட மூவர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications