தாத்தா செய்யற காரியமா இது.. கோவை அருக்காணி பாட்டிக்கு நடந்த சோகம்
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக, நாம் தமிழர், பாஜக, தவெக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை மருந்து பயன்படுத்துதல், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. விருதுநகர் இரட்டை கொலை, திருச்சி இளைஞர் கொலை என்று கடந்த சில நாட்களில் பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கோவையில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் ஒரு முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.
கோவை மாவட்டத்திலும் கொலை சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. தடாகம் அருகே கடந்த வாரம் மது குடிக்கும் பஞ்சாயத்தில் இளைஞர் கொலை, மேட்டுப்பாளையம் ஓட்டுநர் கொலை, பன்னிமடை பகுதியில் வீட்டில் புகுந்து கொலை செய்யப்பட்ட பெண் என்று ஏராளமான கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இத்தனை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

மூதாட்டி கொலை
இந்நிலையில் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே வளையபாளைம் பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணி. 80 வயதான அருக்காணி அம்மாள் தனியாகி வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக அருக்காணி வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. நேற்று அவர் வீட்டில் இருந்து ஒரு வித துர்நாற்றம் வந்துள்ளதால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்தபோது அருக்காணி இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கப்பட்டது. அருக்காணிக்கு கருப்பசாமி என்பவருடன் திருமணமாகி 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இருந்தாலும் அவர் தனியாக தான் வசித்து வந்துள்ளார். அவ்வபோது மட்டும் வாரிசுகள் வந்து பார்த்து செல்வார்கள்.
முதியவர் கைது
காவல்துறை விசாரணையில் அருக்காணி அம்மாள் வீட்டின் அருகே வசித்து வரும் கோபால் (வயது 65) என்பவர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அருக்காணி அணிந்திருந்த தங்க மோதிரத்துக்காக கோபால் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கோபாலை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு பவுன் தங்க மோதிரத்தை மீட்டனர். இந்த சம்பவம் கருமத்தம்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications