மீண்டும் கோவையில் தாக்குதலா? அதிமுக முன்னாள் எம்.பி சொன்ன பரபரப்பு தகவல் - அதிரடியாக மறுத்த கமிஷனர்!
கோவை : கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அசம்பாவிதம் ஏற்பட இருந்ததாகவும், ஆயுதங்களுடன் ஒருவர் கைதாகியுள்ளதாகவும் அதிமுக முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறிய கருத்தை, கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சந்தேக நபர் நின்றதாக அதிமுக முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறிய கருத்து முற்றிலும் தவறானது என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடகா மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில், அதில் தொடர்புடைய நபர் கோவை வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கோவையைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை, சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.பி
அதிமுக முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "கடந்த வாரம் ஒரு விசேஷமான நாளில் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு நேர் எதிரில் சென்று ஒருவர் கவனித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த நபரைப் பிடித்து விசாரித்தால் அவர் உடம்பு முழுவதும் ஆயுதங்கள். காத்திரமான விசாரணை இருந்திருந்தால் இங்கு சாதாரணமாக வந்து குண்டுகளைத் தயாரித்து உடம்பில் கட்டிக்கொண்டு ஒருவர் உலவ முடியுமா? அங்கிருந்து மங்களூருக்கு குண்டுகளுடன் செல்ல முடியுமா? இதையெல்லாம் நாம் அனுமதிக்க முடியுமா?" எனத் தெரிவித்தார்.

முற்றிலும் தவறான தகவல்
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்த இந்தக் கருத்து குறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், இது முற்றிலும் தவறான தகவல். அவரது பேட்டியை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஷாரிக் டி.பி
மேலும் மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஷாரிக் பயன்படுத்திய வாட்ஸ்அப் எண்ணில் கோவை ஆதி யோகி சிலையின் புகைப்படத்தை டிபியாக வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது அதுபற்றி விசாரணை ஏதும் நடைபெறுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோவை கமிஷனர், தற்போது வரை இது போன்ற தகவல்கள் ஏதும் வரவில்லை. வந்தால் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

சிக்னல்
கோவை மாநகர காவல்துறை சார்பில் பாதசாரிகளுக்காக காந்திபுரம் சிக்னல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சிக்னலை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,கோவை மாநகரில் போக்குவரத்தை சரி செய்ய சாலையை கடக்கக்கூடிய பாதசாரிகளுக்கு தனிநேரம் ஒதுக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே லட்சுமி மில் சிக்னலில் இது போன்று வசதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது காந்திபுரம் சிக்னலில் பாதசாரிகள் கடக்க சிக்னல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

டைனமிக் வெஹிகில் செக்கிங்
சாலையை கடக்க கூடிய பொதுமக்கள் அச்சமின்றி வசதியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கு ஏற்ப தற்போது இரண்டாவது சிக்னல் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற சிக்னல்களிலும் அமைக்கப்பட உள்ளது. இந்த சிக்னல் திருவிழா நேரங்களில் பயனுள்ளதாக இருக்கும். கோவையின் எல்லை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. இரவு ரோந்து டைனமிக் வெஹிகில் செக்கிங் நடைபெற்று வருகிறது. சந்தேகப்படும் வாகனங்களை தணிக்கை செய்து வருகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications