கல்லூரி மாணவர்களை குறி வைத்து செயின் பறிப்பு.. சிக்கிய கோவை பாஜக நிர்வாகி
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை பொருள், வழிப்பறி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. அமைதியான ஊர் என்று பெயரெடுத்த கோவையும் அதற்கு விதிவிலக்கில்லை. கோவையில் சமீபகாலமாக ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. கோவையில் கொள்ளையர்களுக்கு உதவி செய்து வந்த பாஜக நிர்வாகி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் அபினேஷ் என்பவர் படித்து வருகிறார். 21 வயதாகும் அபினேஷ் பொள்ளாச்சியைச் சேர்ந்தவராவார். அபினேஷை கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி, அவரின் நண்பரான விக்னேஷ் தொடர்பு கொண்டு சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அவர் சென்றுள்ளார்.

கத்தி முனையில் செயின் பறிப்பு
அங்கு விக்னேஷ் மற்றும் அவரின் நண்பரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வேஷ் இருந்தனர். அபினேஷ்க்கு சர்வேஷை ஏற்கனவே தெரியும். அபினேஷ் அங்கு சென்றவுடன் அந்த இருவரும், அவரை காருக்குள் இழுத்து தள்ளி வேகமாக சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்கள் க.க சாவடி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு விக்னேஷ் மற்றும் சர்வேஷ் ஆகியோர் கத்திமுனையில் அபினேஷை மிரட்டியுள்ளனர்.
அவரின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க செயினை கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அவர்கள் செயினை பறித்து அபினேஷை அந்தப் பகுதியில் விட்டு தப்பித்துள்ளனர். அங்கிருந்து மீண்டு வந்த அபினேஷ், அதே நாளில் இந்த சம்பவம் தொடர்பாக க.க சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர்.
பாஜக நிர்வாகி கைது
தேனியில் தலைமறைவாக இருந்த சர்வேஷை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஆர்எஸ்புரம் பகுதியில் உள்ள விவேக் என்கிற பாஜக நிர்வாகி இதன் பின்னணியில் இருப்பது கண்டறியப்பட்டது. பாஜக மாநில பட்டியலின அணியின் செயற்குழு உறுப்பினராக விவேக் இருப்பது கண்டறியப்பட்டது.
காவல்துறையில் சர்வேஷ் அளித்த வாக்குமூலத்தில், "கொள்ளையடிப்பதற்கு விவேக் தான் கார் கொடுத்து உதவினார். பொதுவாக கொள்ளை சம்பவங்களுக்கு அவரின் காரையே பயன்படுத்த சொல்வார். நாங்கள் கொள்ளையடிக்கும் தங்க நகைகளையும் விவேக்கிடம் வழங்கிவிடுவோம்" என்று கூறியுள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் விவேக்கை கைது செய்துள்ளனர். இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications