கள்ளக்காதல் மோகம்.. 3 வயது குழந்தையை கொன்ற கொடூர தாய், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
கோவை: கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தையைக் கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. சமீபகாலமாக கள்ளக்காதல், கள்ளக்காதலுக்காக கொலை போன்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தையை விஷம் வைத்து தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வெள்ளியங்காட்டைச் சேர்ந்தவர் ரூபினி. இவரது கணவர் சேவூரைச் சேர்ந்த பால்ராஜ். கணவன், மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனது 3 வயது குழந்தையுடன் ரூபினி வெள்ளியங்காட்டில் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ரூபினிக்கும், சற்குணம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதையடுத்து, ரூபினியும், சற்குணமும் கரட்டுமேடு பகுதியில் தனிமையில் சந்திப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டில் குழந்தையுடன் சென்றுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே குழந்தை இடையூறாக இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தையைக் கொன்றுவிடலாம் என்று முடிவு எடுத்து, பிஸ்கட்டில் விஷம் வைத்தும், குழந்தையின் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, சரவணம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு 3வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஏ.கே.பாபுலால் தடையத்தை அழித்ததற்காக 7 ஆண்டுகளும், குழந்தையை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications