Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈஷா யோகா மையத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர எதிர்ப்பு- பெரியார் தி.க. நூதன போராட்டம்

கோவை ஈஷா மையத்துக்கு ஜனாதிபதி வர எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திகவினர் போராட்டம் நடத்தினர்.

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டவிரோதமான ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் தி.க.வினர் போராட்டம் நடத்தினர்.

Coimbatore: TPDK Cadres Protest against President Droupadi Murmus visit to Isha Yoga Centre

ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக நாளை தமிழ்நாடு வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை வழிபடுகிறார் திரவுபதி முர்மு. மதுரையைத் தொடர்ந்து கோவை வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை ஈஷா யோகா மையம், அரசு விருந்தினர் மாளிகை, கோவை சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. மேலும் இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து வாகன ஒத்திகையும் இன்று நடைபெற உள்ளது. கோவையில் சனிக்கிழமை இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி தங்குகிறார்.

Coimbatore: TPDK Cadres Protest against President Droupadi Murmus visit to Isha Yoga Centre

இதனிடையே கோவை ஈஷா மையத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர எதிர்ப்பு தெரிவித்து கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் தி.க.வினர் நேற்று கோவையில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக தந்தை பெரியார் தி.க. நிர்வாகிகள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலையை, யானை வழித்தடங்களை பழங்குடி மக்களின் வாழ்வை, விவசாய நிலங்களை சூறையாடி யோகா என்ற பெயரில் பல உயிர்களை காவு வாங்கியும், பல மர்ம மரணங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு நாட்டின் உயரிய பதவியில் உள்ள அதுவும் பழங்குடி மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்டப்பட்ட ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த வேதனைக்குரியது கண்டனத்துக்குரியது . அவர்கள் செய்யும் சட்ட விரோதமான செயல்களுக்கு அரசே அங்கீகாரம் வழங்குவது போன்று அமைகிறது என்றனர்.

மேலும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி திரவ்பதி முர்மு பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில், பல்வேறு கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் நிர்வாகிகள் இணைந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+