‘அப்பா.. என்னை கொல்ல போறாங்க..’ - வீடியோ காலில் பதறிய கைதி.. கோவை சிறையில் பரபரப்பு
கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் கடந்த வாரம் ஒரு தண்டனை கைதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் கோவை சிறையில் உள்ள மற்றொரு கைதி, தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ காலில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மத்திய சிறையில் 2,500க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 500க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் இருக்கிறார்கள். காந்திபுரம் பகுதியில் உள்ள சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால் சிறை வளாகத்தை காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.

அண்மை காலமாக கோவை மத்திய சிறையை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வெடித்து கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ் என்கிற ஏசுதாஸ், கொலை வழக்கு ஒன்றில் கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார். கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அவர் சிறை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கழுத்து எலும்பு முறிந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்தார் என்றும், கொலை செய்யப்பட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார், துணை ஜெயிலர் உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அதே கோவை மத்திய சிறை வளாகத்தில் மீண்டும் மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (வயது 29). இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் கைதாகி கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.
இவர் தன் வழக்கறிஞரிடம் பேசிய வீடியோ கால் வைரலாகி வருகிறது. அதில் விக்ரம், "அப்பா.. சித்தி.. தம்பி.. ராஜா அண்ணா நான் சொல்றது என்னென்னா.. இங்க என்ன நடக்குதுனு தெரியல. என் கூட இருந்தவனை கொன்னுட்டாங்க. அடுத்து நான் தான். எனக்கு என்ன நடந்தாலும் கிருபாகரன், சதீஷ், பாலு, மோகன் ராம் தான் காரணம்.
என்னை எப்ப கொல்லுவாங்க. என்ன செய்வாங்கனு தெரியல. எனக்கு எந்த நொடி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எப்ப என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்க. எனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு இவங்க தான் காரணம். பார்த்துக்கோங்க." என்றவர் மீண்டும் அதே நபர்களின் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார். "இதை உடனே போட்டு விடு என்றும்." அவர் கூறியுள்ளார்.
"இந்த வீடியோ வழக்கறிஞர் மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டு பிறகு இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறை கைதிகள் மாதம் சராசரியாக 120 நிமிடங்கள் வீடியோ கால் பேச அனுமதி உள்ளது. சிறை அதிகாரிகள் இல்லாத நேரத்தில் விக்ரம், தனது வழக்கறிஞரிடம் தவறான தகவல்களை சொல்லி பரப்பியுள்ளார்.
அவருக்கு சிறைக்குள் எந்த பிரச்னையும் இல்லை. தவறான தகவல் பரப்பிய காரணத்தால் விக்ரம் மற்றும் அவரது வழக்கறிஞர் மீது புகாரளித்துள்ளோம்." என்று கோவை மத்திய சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications