கோவையில் அன்று அண்ணாமலை சொன்ன 'வியூகம்.. இன்று 'இந்தியா' கூட்டணி கையிலெடுக்க வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் ஒரு முறை செய்தியாளர் சந்திப்பில் சாம தான பேத தண்டம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்... ஆனால் இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இந்த முறை அந்த வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பாதி ஓட்டுகள் வரை எண்ண வேண்டியுள்ளதால் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

லோக்சபா தேர்தலில் 2014, 2019 ஆகிய இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாஜக இந்த முறை கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடனே ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலையில் உள்ளது. அதன் முக்கிய கூட்டணி கட்சியான ஆந்திராவின் தெலுங்குதேசம் மற்றும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை உள்ளன. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் 16 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 14 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இந்த இரு கட்சிகளின் தயவு இருந்தால் தான் பாஜக பிரச்சனையில் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை உள்ளது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress 2024 2024 annamalai

ஏனெனில் பாஜக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்புகளின் படி, ஐந்து தொகுதிகளில் வெற்றி உள்பட 246 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை தொட வேண்டும் என்றால் இன்னும் 26 இடங்களில் கூடுதலாக பாஜக வெற்றி பெற வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளதாக என்பது தெரியவில்லை..

இந்த முறை உத்தப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் எதிர்பாராத அளவிற்கு பாஜக தோல்வி அடைந்ததே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரை 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி 295 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முடியும் என்றாலும், பாஜகவின் ஆட்சியை தடுக்க காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிகள் ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் மற்றும் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்ய தொடங்கிவிட்டன. இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத்பவார், அவர்கள் இருவரிடம் தொலைப்பேசியில் பேசியுள்ளார். ஒருவேளை சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ்குமார் இந்தியா கூட்டணி பக்கம் தாவினால் பாஜகவின் நிலைமை சிக்கல் ஆகவிடும்.

கோவையில் ஒரு முறை செய்தியாளர் சந்திப்பில் சாம தான பேத தண்டம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்... ஆனால் இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இந்த முறை அந்த வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பாதி ஓட்டுகள் வரை என்ன வேண்டியுள்ளதால் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. கடைசி நேரத்தில் 20 அல்லது 30 தொகுதிகளில் நிலைமை மாறினாலே, இந்தியா கூட்டணிக்கு சாதகமாகும் என்பதால் அந்த கட்சிகள் மிகவும் கவனமாக காய்நகர்த்தி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+