Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசையாய் வளர்த்த நாயால் வந்த வினை.. கோவையை சோகத்தில் மூழ்கடித்த இளம் பெண் மரணம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை முழுவதுமே தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் நாய்களுக்கு ஆதரவான தன்னார்வலர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தான் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த நாய் கடித்து, நாய் பிரியரான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதுமே தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கட்டுப்படுத்த முடியாதளவுக்கு நாய்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. மக்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது, ரேபிஸ் நோய் அபாயம் என்று எண்ணற்ற பிரச்னைகள் உருவாகின்றன.

dog rabies

கோவை மாவட்டத்திலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காவல்துறை, மாநகராட்சி கடுமையான எச்சரிக்கை விடுத்து, வழக்குப்பதிவு செய்தும் பிரச்னைகள் குறையவில்லை. தினசரி தெரு நாய்களால் ஆங்காங்கே பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தெரு நாய்கள் மட்டுமல்ல, வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்களும் கூட அவ்வப்போது மக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது இளம் பெண் நாய்கள் மீது மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார். இவர் அக்கம், பக்கம் சுற்றி திரியும் தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தார். தினசரி தெருநாய்களுக்கு உணவளிப்பது, அவற்றுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் சிகிச்சைக்கான உதவி செய்வது என்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அவர் வீட்டிலேயே சுமார் 4 நாய்களை பாசமாக வளர்த்து வந்துள்ளார். அதில் கடந்த ஜுலை மாதம் இரண்டு நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு நாய் அந்த பெண்ணை கடித்துள்ளது. அவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள மருத்துவர் அந்த இளம் பெண்ணுக்கு புண் தீவிரம் அடையாமல் இருப்பதற்கான ஊசி மட்டும் செலுத்தினார் என்றும் ரேபிஸ் நோய்க்கான ஊசி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நாளடைவில் அந்தப் பெண்ணுக்கு ரேபிஸ் நோய்க்கான அறிகுறி தென்பட்டுள்ளது.

ரேபிஸ் நோய் குறித்து அவர் தெரிந்துகொள்வதற்கு முன்பே, அந்த நோய் தீவிரமடைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், உயிரிழக்கும் வரை கூட தனக்கு ரேபிஸ் நோய் இருப்பது அந்தப் பெண்ணுக்கு தெரியவில்லை. நாய் கடித்த உடனே அவர் ரேபிஸ் தடுப்பூசி சிகிச்சை எடுத்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்ஜிஓ உதவியுடன் கோவை மாநகரில் சுமார் 10,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம் என்றார்.

நாய்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர், ரேபிஸ் நோயால் உயிரிழந்திருப்பது நாய் பிரியர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல தன்னார்வலர்கள் நாய்களை மீட்பது, உணவளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற நேரத்தில் அலட்சியம் காட்டாமல் சிகிச்சை எடுக்க வேண்டும். ரேபிஸ் நாய்கள் மூலம் மட்டுமே பரவாது. பூனை, குரங்கு, குதிரை, ஆடு, மாடு, கழுதை, வௌவால், எலி, அணில் மூலமாகவும் ரேபிஸ் பரவும். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+