கோவை போலீஸ் நடத்திய வாகன சோதனை.. தவளை தன் வாயால் கெட்ட கதை.. இளைஞைருக்கு சிக்கல்
கோவை: கோவை உக்கடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோலீசாரை பார்த்து உங்களுக்கு இங்கு வாகன சோதனை நடத்த யார் அனுமதி கொடுத்தது.. எப்படி வாகன சோதனை நடத்தலாம் என்று சராமரியாக மிரட்டிய இளைஞர் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் சிக்கும் இளைஞர்கள் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
போலீசார் வாகன சோதனை நடத்துவது தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் உள்ள நடைமுறை.. தினசரி குறிப்பிட்ட இடங்களில் திடீரென வாகன சோதனை நடத்துவார்கள்.. அப்படி சோதனை நடத்தும் போது, வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் காட்ட வேண்டும். வாகனத்தின் ஆவணங்களைசரியாக வைத்திருக்க வேண்டும். தலைகவசம் அணிந்து தான் செல்ல வேண்டும். பின்னால் யாராவது அமர்ந்து இருந்தால் அவர்களும் தலை கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வாகனத்திற்கு இன்சூரன்ஸ் கரெண்டில் இருக்க வேண்டும். வாகனத்திற்கு புகை பரிசோதனை சான்று இருக்க வேண்டும். காரில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.. கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் சரக்கு வாகனங்கள் என்றால் அதில் சரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
எந்த வாகனம் என்றாலும் வாகன ஓட்டுநர்கள் மதுஅருந்தி இருக்கக்கூடாது. மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கண்டிப்பாக வாகனம் பறிமுதல் செய்யப்படும். அபராதமும் கடுமையாக விதிக்கப்படுகிறது. இதேபோல் பார்க்கிங் இல்லாத பகுதிகளில் வாகனம் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இது எல்லா ஊர்களிலும் உள்ள நடைமுறை.
கோவையை பொறுத்தவரை நகர்புறங்களில் தினசரி போக்குவரத்து போலீசார் சோதனை செய்வது வழக்கம். சிலர் தலைகவசம் அணியாமல் வந்து போலீசாருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடும் நிகழ்வுகள் நடைபெறும். சிலர் மதுபோதையில் வந்து போலீசாரின் சோதனையில் தகராறு செய்வதும் நடக்கும்.
இந்நிலையில் கோவை தெற்கு உக்கடம் பொன்விழா நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் அண்மையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும், ஹெல்மெட் 'லாக்' கட்டாயம் போட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தனர். மேலும் ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த அப்பாஸ்(30) என்பவர் போலீசார் வாகன சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். மேலும் இங்கு வாகன சோதனை நடத்த யார் உங்களுக்கு அனுமதி அளித்தார் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியதுடன், போலீசாரை மிரட்டினாராம். இதனால் போலீசாருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் பெரியகடை வீதி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அப்பாஸ் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications