பழைய ஃபார்மில் தி.க... சென்னையில் தார் சட்டி தூக்கி இந்தி அழிக்கும் போராட்டத்தை அறிவித்த கி.வீரமணி
கோவை : தேசிய கல்விக்கொள்கை, நீட் தேர்விற்கு எதிராக இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் என திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு, மாநில உரிமை குறித்த பிரச்சார
பயண விளக்க பொதுக்கூட்டம் கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கருப்புச் சட்டைக்காரன்
அப்போது, புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்விற்கு எதிராக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களது இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "கருப்புச்சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் என்பதை போல எங்களது வேலை உங்களுக்கு சொல்வது. ஆளுநர் அவரது பணியை செய்யவில்லை.

சமத்துவத்தை காட்டிய முதலமைச்சர்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதங்களில் இந்தியாவின் முதல் முதல்வர் என்ற சிறப்பை பெற்றவர் ஸ்டாலின். சமத்துவ நாள் அன்று நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவரின் வீட்டிற்கு சென்று உணவருந்தி சமத்துவத்தை உணர்த்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கை குறித்து சிறு வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளோம்.

ஆய்வு நடத்தி திமுக அரசு மசோதா தாக்கல் செய்தது
பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் நீட் தேர்வை ஆதரிக்கவில்லை. நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசு நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதன் பின்னரே மசோதாவை கொண்டு வந்தது. ஆனால், இதற்கு முன் ஆட்சியிலிருந்த அதிமுக அவ்வாறு செய்யவில்லை,

படிக்க சொல்வது திராவிட மாடல்; படிக்காதீர்கள் என்பது ஆரியம்
2017 ஆம் ஆண்டு தமிழ் வழியில் படித்த மாணவர்களில் 12 சதவீதம் பேர் வரை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு வந்ததற்கு பிறகு 1.7% பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். படிக்க சொல்வது திராவிட மாடல், படிக்காதீர்கள் என்பது ஆரியம். தேசிய கல்விக்கொள்கை என்பது அசலான மனுதர்மம். குலக்கல்வியை விட மோசமான கல்வியை கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரே சாதி என்று அறிவிக்காதது ஏன்?
நாடு முழுவதும் ஒரே தேர்வு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்பதை எப்படி ஏற்க முடியும்? அவ்வாறு சொல்பவர்கள் ஒரே சாதி என்று அறிவிக்காதது ஏன்? புதிய கல்விக்கொள்கை படிக்காதே என்று சொல்கிறது. 3, 5, 8, 10, 12 ஆம் வகுப்புகளில் பல தேர்வுகளை எழுதினாலும் மதிப்பெண்ணுக்கு மதிப்பில்லை. இதையெல்லாம் தட்டிக்கேட்கக்கூடிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

இந்தி அழிப்பு போராட்டம்
ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை கொண்டு வருவதாக அமித்ஷா சொல்கிறார். அவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மீண்டும் கொண்டு வர பார்க்கின்றனர். இந்திக்கு எதிராக தார்சட்டி தூக்கி போராடிய இயக்கம் திராவிடர் கழகம். வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னையில் தார்சட்டி தூக்கி இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்துவோம்." என்றார்.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications