பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி.. ஈஸ்வரன் குற்றச்சாட்டு
குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக கொங்கு மண்டல ஈஸ்வரன் கூறியுள்ளார்.
கோவை: பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்வதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மீண்டும் ஒரு குற்றச்சாட்டை பகிரங்கமாக முன் வைத்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை முதன்முதலில் வெளிகொண்டுவந்ததே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்தான். கடந்த மாதம் பிப்ரவரி இறுதியிலேயே இது சம்பந்தமான விரிவான அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். ஆனால் அப்போது அது பெரிதாக பார்க்கப்படவில்லை.
"காதலிப்பது போல நடித்து இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்துபோய் அதை காவல்துறையிடம் மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

மக்கள் கொதிப்பு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக காவல்துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்வதை பார்த்து பொள்ளாச்சி மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.கொலை குற்றத்தைவிட கொடியது இது. உடனே நடவடிக்கை எடுங்கள்" என்று விலாவரியாக தெரிவித்து இருந்தார்.

திமுக முற்றுகை
இதையடுத்துதான் திமுகவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது. ஒருவேளை கடந்த மாதமே அதாவது ஈஸ்வரன் இச்சம்பவத்தை பகிரங்கப்படுத்தப்பட்ட உடனேயே நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டிருந்தால், பல குற்றவாளிகள் சிக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பகிரங்க குற்றச்சாட்டு
ஆனால் 20 பேர் கொண்ட கும்பலில் வெறும் 4 பேர் மட்டுமே குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர். மீதமுள்ளவர்கள் குறித்த விவரங்கள் மந்தமான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் ஈஸ்வரன். இதுகுறித்து ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்வதாக பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார்.

குற்றவாளி யார்?
இதில் ஈஸ்வரன் சொல்லும் குற்றவாளி யார்? எந்த குற்றவாளியை காப்பாற்ற அரசு முயற்சி செய்வதாக சொல்கிறார் என்று தெரியவில்லை. என்றாலும் காவல்துறை இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications