என்னை 24 மணி நேரமும் தொண்டர்கள் சந்திக்கலாம்! ஸ்டாலினை அப்படி சந்திக்க முடியுமா? -எடப்பாடி பழனிசாமி
கோவை: தன்னை 24 மணி நேரமும் நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்திக்கலாம் என்றும் முதல்வர் ஸ்டாலினை அவ்வாறு யாரும் சந்திக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆறுகுட்டியை நம்பி அதிமுக இல்லை என்றும் ஆதாயம் தேடி அவர் திமுகவுக்கு சென்றிருக்கிறார் எனவும் விமர்சித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

கோவையில் எடப்பாடி
கோவை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகி செந்தில் கார்த்திகேயன் இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை கோவை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்திருந்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதேபோல் கட்சியினரையும் பெருமளவில் திரட்டி எடப்பாடி பழனிசாமியின் மனதை குளிர்வித்தார் எஸ்.பி.வேலுமணி.

ஆறுகுட்டி திமுகவில்
எடப்பாடி பழனிசாமி கோவை வந்த தருணத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி பொள்ளாச்சியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருந்தார். இதையடுத்து அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஆறுகுட்டியை நம்பி அதிமுக இல்லை என பளிச் பதில் அளித்தார். மேலும், தற்போது அதிமுக ஆளுங்கட்சி இல்லை என்பதால் திமுகவுக்கு ஆதாயம் தேடி சென்றிருக்கிறார் என விமர்சித்தார்.

வேடந்தாங்கல் பறவை
வேடந்தாங்கல் பறவையை போல் ஆறுகுட்டி இடம் மாறிக்கொண்டே இருப்பார் என மிகவும் கூலாக கூறினார். மேலும், தன்னை 24 மணி நேரமும் நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்திக்கலாம் என்றும் ஸ்டாலினை அவ்வாறு யாரும் சந்திக்க முடியாது எனவும் தெரிவித்தார். திமுகவில் இணைந்த ஆறுகுட்டி இனி மேல் முதல்வர் ஸ்டாலின் வீட்டு கேட்டை கூட தொட முடியாது எனவும் தெரிவித்தார். இன்றோடு சரி இனி அடுத்து ஸ்டாலினை அவரால் நெருங்கவே முடியாது எனத் தெரிவித்தார்.

கவுண்டம்பாளையம்
எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேட்டி அளித்திருந்தாலும் கூட ஆறுகுட்டி திமுகவுக்கு சென்றது அதிமுகவை பொறுத்தவரை ஒரு இழப்பாகவே கருதப்படுகிறது. ஏனெனில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்சிக்கு அப்பாற்பட்டு தனக்கென தனி செல்வாக்கை உருவாக்கி வைத்திருப்பவர் ஆறுகுட்டி என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications