மேட்டுப்பாளையத்தில் பிப்.8ல் யானைகள் புத்துணர்வு முகாம் : தமிழக அரசு அறிவிப்பு
கோவை: யானைகள் புத்துணர்வு முகாம் வரும் 8ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் நடைபெறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் முகாமில் பங்கேற்க உள்ளன.
Recommended Video

யானைகளுக்கு மதம் பிடித்து அதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு மூலிகை உணவுகள், மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.

இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வரும் 8ஆம் தேதி முதல் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் முகாமில் பங்கேற்க உள்ளன.
யானைகள் அனைத்தும் 7ஆம் தேதி பகல் 2 மணிக்குள் முகாம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர வேண்டும். முகாமின் துவக்க விழா வரும் 8ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
யானை பாகன்கள் முகாமிற்கு வரும் போது கட்டில் கொண்டு வர வேண்டும். யானைகளை அழைத்து செல்லும் வழியில் மின்சார ஒயர்கள் குறுக்கும் நெடுக்குமாக இருக்க வாய்ப்புள்ளதால் யானைகளை மிகவும் பாதுகாப்பாக முகாமிற்கு அழைத்து வர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications