தடாகத்தை பயமுறுத்தும் அந்த உருவம்.. கதிகலங்க வைக்கும் காட்டு யானைகள்.. கோவையில் திக் திக்
கோவை: கோவையில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், தடாகம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து பொருட்களை தின்று சென்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, காட்டு பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட அதிக அளவிலான வன விலங்குகள் உள்ளன. சில சமயங்களில் இந்த வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்புகளுக்குள் புகுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த விலங்குகள் விவசாயப் பகுதிகளை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனித விலங்கு மோதல்களும் அதிகரித்து வருகின்றன.

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மதுக்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கணுவாய், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உலா வருகின்றன. அவ்வாறு வரும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி சொல்வதும், கடைகளை சேதப்படுத்தி செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக, கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஷெட் அமைத்து தங்கும் வடமாநில தொழிலாளிகள் பயன்படுத்தும் ரேஷன் அரிசியை குறிவைத்து காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துகின்றன. மனிதர்களின் உணவுக்கு பழக்கப்படும் இந்த யானைகள் தொடர்ந்து குடியிருப்புகள், ரேஷன் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளன.
ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைக் கழிவுகளை கொட்டுவது, விதிமுறைகளை மீறி யானை வழித்தடங்களில் வீடுகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவை அமைக்கப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனப் பகுதிக்குள் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் நேற்று நள்ளிரவில் ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று சென்றுள்ளது. சத்தம் கேட்டு வந்த ஊர்மக்கள் பட்டாசு வெடித்தும், சப்தம் எழுப்பியும் யானைகளை விரட்டினர்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பும் இதே கடையை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்ற நிலையில், தற்போதும் வந்து சேதப்படுத்தி ரேஷன் பொருட்களை தின்று சென்றுள்ளது. அடிக்கடி இப்பகுதிக்கு வரும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதாகவும், ரேசன் கடை, மளிகை கடைகளை சேதப்படுத்துவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, வனத் துறையினர் யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications