கோவை டூ சிங்கப்பூர் இனி ஜாலியா பறக்கலாம்.. மகிழ்ச்சி தகவல்
கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டுள்ளதால் தொழில்துறையினர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பாக தென்னகத்தின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து இலங்கை சிங்கப்பூர் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா காரணமாக சர்வதேச நாடுகளுக்கும் உள்ளூர்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதேபோல் கோவையில் இருந்து மூன்று நாடுகளுக்கும் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

விமான சேவை நிறுத்தம்
இந்த நிலையில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்ததை அடுத்து கோவையில் இருந்து துபாய் நாட்டின் ஷார்ஜாவுக்கு மட்டும் கடந்த சில மாதங்களாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில் துறையினர் கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மீண்டும் விமான சேவை துவக்கம்
இதனையடுத்து நீண்ட பரிசீலனைக்கு பிறகு கோவை சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் துவக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளதால் சுற்றுலா பயணிகள் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல நாடுகளுக்கு விமான சேவை வழங்கி வரும் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது புதன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவை பயணிகளுக்கு வழங்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விமான சேவை நேரம்
இரவு 10.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் தரை இறங்கும் ஃப்ளை ஸ்கூட் விமானம் மீண்டும் இரவு 11.45 மணிக்கு கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிங்கப்பூரில் இருந்து நேரடியாக கோவை செல்லும் பயணிகளுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும் எனவும், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்து கோவை வர முயற்சி செய்பவர்களுக்கு இந்த விமானத்தில் பயணிக்க அனுமதி கிடையாது என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை
நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட கோவை சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால் தொழில்துறையினர் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மேலும் பல நாடுகளுக்கு கோவையிலிருந்து நேரடியாக விமான சேவையை வழங்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications