சூலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு... அமமுக அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

கோவை: சூலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருப்பது அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதேபோல் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் வரும் மே 19ம் தேதி நடந்தது.

Gift pack symbol allotted independent candidate in sulur

வேட்பு மனு பரிசீலனை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், சுயேட்டை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணியும், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியும் நான்கு தொகுதிகளிலும் நடந்தது.

இதி சூலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுகுமார் என்பவருக்கு பரிசுப்பெட்டி சினனத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பரிசு சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டிருந்த நிலையில் சுயேட்சைக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக 18 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 39 தொகுதி மக்களவை தொகுதி தேர்தலில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சுயேட்சைகளாகவே கருதினாலும், பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்தது. இப்போது ஒதுக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+