தமிழக மக்கள் ஓட்டு போட்டு பாஜக ஆட்சியை பிடிக்கலையாம்.. எச்.ராஜா திடீர் கண்டுபிடிப்பு!
எச்.ராஜாவின் பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: இவ்வளவு நாள் எச்.ராஜா பேசியதை விடுங்க.. இப்போது ஒரு கேள்விக்கு பதில் சொல்லி இருக்கார் பாருங்க... அசந்துடுவீங்க!!
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க இதுவரை பிரதமர் மோடி வரவேயில்லை. இதனால் அனைத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கோபமடைந்து கண்டனங்களை தெரிவித்தார்கள்.
இதற்கு நடுவில் பிரியாங்கா சோப்ரா கல்யாணத்துக்கு பிரதமர் போனதும், இந்த கோபம் இன்னும் அதிகரித்தது. அங்கெல்லாம் போக தெரியுதா? தமிழகத்துக்கு வர தெரியவில்லையா? என்று மக்களும் கொதித்து போனார்கள். அதனால்தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தும் முழு சந்தோஷம் அடைய முடியவில்லை.

சமாளித்தார்
இதை பற்றி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் கருத்து கேட்கும்போதெல்லாம், "அவர்தான் போனில் புயலை பற்றி விசாரித்தாரே, புயல் அடித்த 6 மணி நேரத்தில் நாங்கள் அங்கு ஓடினோம்" என்று சமாளித்தே வந்தார்.

சோனியா, ராகுல்
இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை எச்.ராஜா சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள், "புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை" என்று கேட்டனர். அதற்கு எச்.ராஜா, சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவை ஏன் கூப்பிட வேண்டும் என்று கேள்வி கேட்டு, காங்கிரசையும், ஸ்டாலினையும் திட்ட ஆரம்பித்து விட்டார்.

தமிழக மக்கள்
உடனே செய்தியாளர்கள் குறுக்கிட்டு, "சரி.. காங்கிரஸ் சரியில்லை என்றுதானே பாஜகவுக்கு மக்கள் ஓட்டுபோட்டார்கள், அப்படி இருக்கும்போது இப்போது மக்களே பாஜகவை குறை சொல்கிறார்களே, உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்" என்றனர். உடனே எச்.ராஜா, தமிழக மக்கள் ஓட்டு போட்டு ஒன்னும் பாஜக ஆட்சிக்கு வரவில்லை" என்றார்.

அடுத்த சர்ச்சை
தமிழக மக்கள் ஓட்டு போட்டுவிட்டு பாஜக ஆட்சிக்கு வரவில்லை என்ற எச்.ராஜாவின் இந்த பேச்சு சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே நம் மக்கள் கோபமாக உள்ள நிலையில், ஓட்டு போட்டு பிரதமர் வரவில்லை என்று எச்.ராஜா சொல்லி உள்ளதால், வரும் தேர்தலில் எந்த அளவுக்கு மக்கள் இதற்கு பதில் சொல்ல போகிறார்கள் என தெரியவில்லை.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications