டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பில்லை - நயினார் நாகேந்திரன் பதிலடி

Subscribe to Oneindia Tamil

கோவை: பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளே காரணமே என்று கூறியிருந்தார். இந்நிலையில், கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய பிறகு அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அவர் ஏன் அப்படி பேசினார் என எனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது டிடிவி தினகரனும் பிரிந்துள்ளது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

i-am-not-responsible-for-ttv-dhinakarans-allegations-says-nainar-nagendran

இதுகுறித்து டிடிவி தினகரன் மதுரையில் அளித்த பேட்டி ஒன்றில், மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம். நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்லும். கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவுகளின் காரணமாகவே வெளியேறினோம். பாஜக கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு வெளியேறவில்லை.

பாஜகவில் இருந்து விலகுவது என்பது நாங்கள் நிதானமாக எடுத்த முடிவுதான். தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கொடுத்த பதில் மிகவும் ஆணவமிக்கது. பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய பிறகு அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அவர் ஏன் அப்படி பேசினார் என எனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியில் போனதற்கான நான் காரணம் என்று அவர் எப்படி சொல்கிறார் எனத் தெரியவில்லை. பாஜக எப்போதுமே கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றே நினைக்கும். எனது தனிப்பட்ட முறையில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எல்லா கட்சியினரும் ஒன்று சேர வேண்டும் என்றே நான் எப்போதும் கூறி வருகிறேன். ஓரிடத்தில் கூட நான் யாரையும் வேண்டாம் என்று கூறியதே இல்லை என்றார்.

தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்ற டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. பாராளுமன்றத்தில் டிடிவி தினகரனுடன் கூட்டணியில் இருந்தோம். அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் 165 இடத்தில் போட்டியிட்டு 2 சதவீத ஓட்டுகள் வாங்கியிருக்கின்றனர்.

ஆனால், அதைப் பற்றி நாங்கள் யாரையும் எதுவும் குறை கூறவில்லையே. எங்களுக்கு குறை கூற வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான ஆட்களும் நாங்களும் இல்லை என்றார். எடப்பாடியின் உட்கட்சிப் பிரச்சனை குறித்து நாம் கருத்து சொல்ல முடியாது. நாங்கள் டிடிவி தினகரனை எப்படி வெறியேற்ற முடியும். எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். தலைவர் பதவியை ஏற்றதில் இருந்து நான் இதைத்தான் கூறி வருகிறேன்.

நான் யாரிடமும் ஆணவமாக நடந்து கொண்டதில்லை. துக்கடா கட்சி என்று நாங்கள் யாரையும் நினைக்கவில்லை. அப்படியென்றால் நாங்கள் ஏன் கூட்டணியில் இணைக்கப் போகிறோம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைத்திருந்தால் இதுபோன்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+