கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரி சோதனை
கோவை: கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு நாடு முழுவதும் தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.
கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின். இவர் லாட்டரி தொழில் செய்து வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் நாடு முழுவதும் செய்து வருகிறார்.

இந்நிலையில் மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும், கொல்கத்தாவில் 18 இடங்களிலும், மும்பையில் 5 இடங்களிலும் வருமான வரித்துறையினர் ஒரேநேரத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக ஹைதராபாத், கவுஹாத்தி, சிலிகுரி, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்
லாட்டரி அதிபர் மார்டினை வருமான வரித்துறையினர் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications