குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... லதா ரஜினிகாந்த் வேதனை
கோவை: நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக லதா ரஜினிகாந்த் வேதனையுடன் தெரிவித்தாா்.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். இவர் தயா பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் சமூக சேவைகள் செய்து வருகிறார். அத்துடன் பீஸ் பார் சில்ரன் என்ற பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், கோவையில் குழந்தைகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.இதில் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு குழந்தைகளுடன் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: குழந்தைகளை காக்கும் வகையில் குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை எனவும், குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும். குழந்தைகள் பிரச்சினைக்குள்ளாகி இருப்பதை பார்பவர்கள் உடனடியாக தகவல் அளித்தால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தீரும் எனவும் அவர் கூறினார்

குழந்தைகள் பாதுகாப்பு
குழந்தைகளை பாதுகாப்பதற்காகவே பீஸ் பார் சில்ட்ரன் என்ற அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு ஊராக கொண்டு செல்கிறோம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் இந்த அமைப்பை தொடங்க உள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாலியல் அத்துமீறல்கள்
முன்னதாக பேசிய லதா ரஜினிகாந்த், இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடந்து நடந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவித்தார். மேலும், அண்மையில் நடக்கும் சம்பவங்களை பட்டியலிட முடிவில்லை என்றார்.

அவசியம்
சமூகத்தில் அனைவரும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் எனக் கூறிய லதா ரஜினிகாந்த், கூட்டுக் குடும்பங்கள் தற்போது குறைந்து விட்டதால், குழந்தைகளுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லாமல் வளரும் சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கண்காணிக்க வேண்டும்
குழந்தைகள் கடத்தல், விற்பனை சம்பவங்கள், சாதாரண செய்தி போல நாள்தோறும் கடந்து செல்வது வேதனை அளிப்பதாக கூறிய லதா ரஜினிகாந்த், முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருந்தது, குழந்தைகளை பெரியவர்கள் கண்காணித்து கொண்டே இருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications