கொ.ம.தே.கவுக்கு 4 மாவட்ட கவுன்சிலர்கள்.. 10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்
கோயம்புத்தூர்: உள்ளாட்சி தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க)வுக்கு 4 மாவட்ட கவுன்சிலர்கள், 10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் கிடைத்துள்ளன.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிட்டது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 4 இடங்கள் கொ,ம.தே.கவுக்கு கிடைத்துள்ளது.
கோவை 13-வது வார்டில் ராதாவேணி கனகராஜ்; திருப்பூர் 7-வது வார்டில் ராஜேந்திரன்; நாமக்கல் 10- வது வார்டில் ராஜாத்தி அருள்மணி; ஈரோடு 11-வது வார்டில் சிவகாமி தங்கவேல் ஆகியோர் மாவட்ட கவுன்சிலர்களாகி உள்ளனர்.
கொ.ம.தே.க.வின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விவரங்கள்:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொந்தளம் ஊராட்சியில் பழனிசாமி, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் கொத்தமங்களம் ஊராட்சி பழனிசாமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சதுமுகை ஊராட்சியில் பர்குணன்
நாகை - இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்திய பாஜக
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செட்டியக்காபாளையம் ஊராட்சியில் சேது என்ற ஞானசேகரன்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கதிராநல்லூர் ஊராட்சியில் தரணிபாபு, நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் எர்ணாபுரம் ஊராட்சியில் சசிக்குமார், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்பட்ட அரூர் ஊராட்சியில் செல்லப்பன் ஆகியோர் வென்றுள்ளனர்.