கோவையில் பெண் காவலர் ஆய்வாளர் சஸ்பெண்ட்.. குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி டிஐஜி அதிரடி
கோவை பெண் போலீஸ் கலையரசி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
கோவை: கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவலர் ஆய்வாளர் கலையரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. இதற்கான உத்தரவை கோவை சரக டிஜஜி. முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் சமீப காலமாகவே அடிதடி, தகராறு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவைகள் அதிகரித்து வருகிறது..
இப்படி குற்றப்பிரிவு சார்ந்த புகார்கள் தொடர்பாக, ஏராளமான மக்கள் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தந்தும் வருகின்றனர்.

காவல்துறை
அந்த புகார்கள் மீது காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கின்றனர்... ஆனால், நிதி மோசடி, நகை மோசடி போன்ற சில வகை புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், குற்றம் சாட்டப்படும் நபர் தப்பும் வகையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாகவும், சில இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் குற்றம் சாட்டும் நபருக்கு ஆதரவாக செயல்பட்டு, புகார் அளித்தவர் மீதே வழக்குப்பதிந்து அவர்களை அலைகழித்தல் போன்ற நிகழ்வுகளும் நடப்பதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பேட்டி
இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையரும் முன்பு ஒருமுறை பேட்டி தந்திருந்தார்.. அதில், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் அளிக்க சென்று, காவல்துறை அதிகாரிகளின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளால் பொதுமக்கள் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால், என்னிடம் தயங்காமல் வந்து புகார் அளிக்கலாம்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அப்போதுமுதலே ஆய்வாளர் கலையரசி என்பவர் மீதான புகார்கள் அதிகரிக்க தொடங்கின.

பொருளாதார குற்றப்பிரிவு
கடந்த காலங்களில் ஏகப்பட்ட புகார்கள் கோவை பெண் போலீஸ் கலையரசி மீது எழுந்தன.. இதையடுத்து சமீபத்தில், இவரை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கலையரசியை திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்தனர்.. ஆனால், இவர் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தபோதுதான், அதிக அளவில் குற்றவாளிகளுக்கு துணை போயுள்ளதாக கூறப்பட்டது.

சஸ்பெண்ட்
எனவே, கலையரசி மீதான பண மோசடி உள்ளிட்ட பல புகார்கள் மேலிட அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றது. அதுமட்டுமல்ல, மோசடி நிறுவனங்கள் குறித்த புகார்களை கலையரசி உடனடியாக விசாரிக்கவில்லை என்ற புகார்தான் பூதாகரமாக இவர்மீது எழுந்தது. இதையடுத்து, கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட கலையரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. இதற்கான உத்தரவை கோவை சரக டிஐஜி. முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications