ரூ.3 கோடி வாங்கித் தருவதாக போலீசார் பேரம் பேசுறாங்க.. இறந்த மார்ட்டின் ஊழியரின் மனைவி குற்றச்சாட்டு
Recommended Video
கோவை: புகாரை வாபஸ் பெற்றால், ரூ.3 கோடி வாங்கித்தருவதாக போலீசார் தன்னிடம் பேரம் பேசுவதாக, மர்மமாக இறந்த மார்ட்டின் நிறுவன ஊழியரின் மனைவி குற்றம்சாட்டி உள்ளார்.
கோவையைச் சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இவருக்கு கோவை உள்பட நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்ட்டின் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு நடுவே மார்ட்டினின் உதவியாளராக வேலை பார்த்துவந்த கோவை உருண்டாம் பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பரிசோதனை
இந்நிலையில் காரமடை அருகே வெள்ளிங்காடு பகுதியில் ஒரு குளத்தில் பழனிச்சாமி பிணமாக மிதந்தார். அவருடைய உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தற்கொலை வழக்கு
பழனிச்சாமி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக வருமான வரித்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடலை வாங்க மறுப்பு
இதனிடையே பழனிச்சாமியின் மனைவி சாந்தா தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் பிரேத பரிசோதனை மீண்டும் தாங்கள் நியமிக்கும் டாக்டர்கள் முன்பு நடக்கவேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்.

ரகசியங்கள் வந்திடும்
இதனிடையே பழனிச்சாமியின் மனைவி சாந்தா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எனது கணவரின் சாவுக்கு மார்ட்டின் நிறுவனத்தினர் தான் முக்கிய காரணம். வருமான வரித்துறையில இருக்குறதா சொல்லிக்கிட்டு என் வீட்டுக்கு வந்தவங்க, அவரிடம் விசாரணை நடத்தினாங்க. 25 வருடங்களாக என் கணவர் மார்ட்டின் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர்களின் ரகசியங்களை வெளியே சொல்லிவிடுவார் என நினைத்து அவரை கொலை செய்து விட்டார்கள்.

போலீசார் பேரம்
எனவே நான் கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்து இருப்பதால் புகாரை வாபஸ் பெறுமாறு போலீசார் கூறுகிறார்கள். புகாரை வாபஸ் பெற்றால், ரூ.3 கோடி வாங்கித் தருவதாக என்னிடம் பேரம் பேசுகிறார்கள். எனக்கு பணம் வேண்டாம். என் கணவரின் சாவுக்கு நீதி வேண்டும். சிபிசிஐடி விசாரணை நடத்தினால் தான் முழு உண்மை வரும்" என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications