250 மில்லி கிராம் தங்கத்தில் பனி மலை, கிறிஸ்மஸ் குடில்- அசத்திய கோவை ராஜா
கோவை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 250 மில்லி கிராம் தங்கத்தில், பனி மலையில் கிறிஸ்மஸ் குடில், 5 சிறிய மான்கள் போன்ற சிறிய சிற்பத்தை கோவையை சேர்ந்த யு.எம்.டி.ராஜா உருவாக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த கொண்டாட்டங்கள் தொடருகின்றன. கோவையை சேர்ந்தவர் யு.எம்.டி.ராஜா என்பவர் பண்டிகை மற்றும் குடியரசு, சுதந்திர தின நாட்களில் சிறிய அளவிலான பல்வேறு விதமான ஓவியம் மற்றும் கலைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.
கன்னியாகுமரி அருமனையில் கிறிஸ்துமஸ் விழா- 2 ஏழைகளுக்கு விமரிசையாக இலவச திருமணம்
இதில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 250 கிராம் தங்கத்தில் கிறிஸ்துமஸ் குடில் உள்ளிட்ட சிற்பத்தை உருவாக்கி உள்ளார் ராஜா.
இது குறித்து ராஜா கூறுகையில், பொதுமக்களிடம் நாட்டுப்பற்று மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இது போன்று சிற்பங்களை உருவாக்கி வருகிறேன். அது போன்று இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இந்த சிற்பத்தை உருவாக்கி உள்ளேன் என்றார்.