போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூருக்கு பதிலாக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதுகுறித்து கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கடுப்பாகி பதில் சொல்லியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தில் 5 வருடங்களாக மக்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தினசரி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து இருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி குறித்த கேள்வி
தமிழகத்தில் கிட்டத்தட்ட 9,000 பெண்கள் பாதிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மேலும் 3500க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் எந்த குடும்பமும் வாழ முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப் போய்விட்டது. அதை கட்டிக் காக்க முதலமைச்சர் தவறவிட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி
தற்போது திமுக தலைவர் மீண்டும் அதே வேட்பாளர்களை அறிவித்துள்ளார். தமிழக மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள். செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டால் போட்டியிட்டு கொள்ளட்டும். திமுகவில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தாலும் அங்கு ஆட்சி செய்வது ஒரே முகம் தான். அந்த முகம் இந்த தேர்தலில் மாற்றப்பட வேண்டும்.
மிக விரைவில் வேட்பாளர் பட்டியல்
மக்களுக்கு தேவையான நன்மைகள் செய்வதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும். இந்தக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் மட்டுமே தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும். தமிழகத்தில் கஞ்சா இல்லாத, பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகம் வேண்டும் என்றால் புரட்சித்தலைவர் வழி் வந்தவரால் மட்டுமே அதை செய்ய முடியும். மிக விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்" என்றார்.
-
வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுப்பு! திமுகவின் சாமிநாதன் வேட்பாளரானது எப்படி? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி











Click it and Unblock the Notifications