போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூருக்கு பதிலாக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதுகுறித்து கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கடுப்பாகி பதில் சொல்லியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தில் 5 வருடங்களாக மக்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தினசரி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து இருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி குறித்த கேள்வி
தமிழகத்தில் கிட்டத்தட்ட 9,000 பெண்கள் பாதிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மேலும் 3500க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் எந்த குடும்பமும் வாழ முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப் போய்விட்டது. அதை கட்டிக் காக்க முதலமைச்சர் தவறவிட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி
தற்போது திமுக தலைவர் மீண்டும் அதே வேட்பாளர்களை அறிவித்துள்ளார். தமிழக மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள். செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டால் போட்டியிட்டு கொள்ளட்டும். திமுகவில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தாலும் அங்கு ஆட்சி செய்வது ஒரே முகம் தான். அந்த முகம் இந்த தேர்தலில் மாற்றப்பட வேண்டும்.
மிக விரைவில் வேட்பாளர் பட்டியல்
மக்களுக்கு தேவையான நன்மைகள் செய்வதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும். இந்தக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் மட்டுமே தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும். தமிழகத்தில் கஞ்சா இல்லாத, பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகம் வேண்டும் என்றால் புரட்சித்தலைவர் வழி் வந்தவரால் மட்டுமே அதை செய்ய முடியும். மிக விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்" என்றார்.
-
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
கோவையின் இதயப் பகுதியில் ஏற்பட போகும் மாற்றம்.. செந்தில் பாலாஜி ஷார்ப் திட்டம் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!











Click it and Unblock the Notifications