கோவையில் மேலும் ஒரு யானை பலி.. 3 நாட்களாக உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை!
கோவை: கோவையில் கடந்த 3 நாட்களாக வனத்துறையினரால் சிகிச்சை பெற்று வந்த யானை சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டது.
Recommended Video
போட்ஸ்வானா நாட்டில் 300-க்கும் மேற்பட்ட யானை பலியாகிவிட்டது. இதற்கான காரணங்கள் தெரியவில்லை. எனினும் அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் யானைகளின் தந்தங்கள் அப்படியே இருப்பதால் அவை வேட்டையாடப்படவில்லை என்று உறுதியானது. இதையடுத்து விசாரணையில் அவை குடித்த தண்ணீரில் தொற்று ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும் இதுவும் உறுதியாகவில்லை.
அது போல் கோவையிலும் அவ்வப்போது யானைகள் காரணம் ஏதும் இன்றி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சாடிவயல் அருகே சர்க்கார்போர்த்தி பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க யானை உடல்நலக் குறைவால் சிக்கி தவித்தது.
இதனால் உணவருந்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானைக்கு கடந்த 3 தினங்களாக சிகிச்சை அளித்து வந்தனர். அந்த யானை சுருண்டு சுருண்டு படுப்பதால் அதற்கு வயிற்று வலியாக இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த யானைக்கு குளுகோஸ் செலுத்தப்பட்டது. வயிற்றுவலிக்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டன. எனினும் அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. கோவையில் 8 மாதங்களில் 17 யானைகள் பலியாகிவிட்டன. இது போல் அடுத்தடுத்து யானைகள் பலியாவதால் விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications