"சார்.. என் மூளையை காணோம்.. கண்டுபிடிச்சு தாங்க" கமிஷனரிடம் புகார் அளிக்க வந்தவரால் பரபரப்பு
மூளையை காணவில்லை என கோவை போலீசில் விசித்திர புகார் அளித்துள்ளார்.
Recommended Video

கோவை: "சார்.. என் மூளையை காணோம்" என்று புகார் அளிக்க வந்தவரை கண்டு கோவை போலீசார் ஷாக் ஆகி நின்றுவிட்டனர்.
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும். நேற்றும்கூட பிஸியாக இருந்த நேரத்தில் ஒருவர் புகார் அளிக்க வந்தார். அவருக்கு 55 வயதிருக்கும்.
பிரதான அலுவலகம் வழியாக உள்ளே சென்றவர், அங்குள்ள வரவேற்பாளரிடம் கையில் இருந்த மனுவை கொடுத்தார். போலீசாரும் அவரிடம் என்ன புகார், எது சம்பந்தமானது என்று விசாரித்தனர்.

கமிஷனர் எங்கே
அதற்கு அவர், "சார்.. அதை உங்ககிட்ட எல்லாம் சொல்ல முடியாது. ஸ்டிரைட்டா கமிஷனர் கிட்டதான் நான் இது சம்பந்தமா பேசணும்" என்று சொல்லிக் கொண்டே கமிஷனர் ரூமை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டார்.

ரொம்ப கஷ்டப்படறேன்
விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரமாக்கினர். அப்போது அந்நபர், "சார்.. என் மூளையை காணோம், யாரோ என்னை ஏமாத்தி மூளையையும் திருடிட்டாங்க. மூளை இல்லாம நான் ரொம்ப கஷ்டப்படறேன்.

அதிர்ந்தனர்
என் மூளையை வெச்சி யாரோ ஏதோ சதி செய்றாங்க, அதனால்தான் என்னால இப்போ எதுவும் யோசிக்க முடியல. கமிஷனரை பார்த்து கம்பிளைன்ட் தர போறேன்" என்றார். இதைக்கேட்டதும் அதிர்ந்து நின்ற போலீசார், அவர் பாக்கெட்டில் இருந்த பேப்பர்கள், ஆவணங்களை சோதனை செய்து பார்த்தனர்.

மனநலம் பாதிப்பு
அந்தநபர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணமூர்த்தி என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வீட்டு அட்ரஸை கண்டுபிடித்து அந்நபரை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications