பென்ஷனில் அதிரடி.. பட்டா மாறுதலுக்கு சூப்பர் வாய்ப்பு.. கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.. அருமை
கோவை: தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இந்த முகாம்களில் அந்தந்த பகுதி மக்கள் பங்கேற்று, அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மனு வழங்கிவருகிறார்கள்.. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.. அந்தவகையில் இன்றைய தினம் கோவையில் முகாம் நடைபெற உள்ளது.. இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மற்றும் சிதம்பரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, "உங்களுடன் ஸ்டாலின்" என்ற முகாமினை திறந்து வைத்தார்.

இந்த முகாம் மூலம், ஆதார் அட்டையில் பெயர் மாற்றம்,ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பட்டா பெயர் மாற்றம், மருத்துவ காப்பீடு விண்ணப்பிப்பது லிட்டர் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார்..
உங்களுடன் ஸ்டாலின் - பலத்த வரவேற்பு
மேலும், இந்த திட்டம் மூலம் சாதிச்சான்றிதழ், , பட்டா மாற்றம் செய்ய, பென்ஷன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு அரசு அலுவலர்களே நேரடியாக மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் முகாம்
இதையடுத்து, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது இந்த முகாமில் மகளிர்கான உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, விண்ணப்பதாரர்களுக்கு வெறும் 10 நிமிடங்களிலேயே அனைத்து பணிகளும் முடித்து தரப்படுகிறதாம்.. எனவே, இந்த திட்டத்தால் பொதுமக்கள் நேரடியாகவே பலன்களை பெற்று வருகின்றனர்.
அந்தவகையில், கோவை மாவட்டத்திலும் முகாம் நடந்து வருகிறது. இது குறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், "அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 336 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மொத்தம் 120 முகாம்கள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறுகிறது.
பென்ஷன் வாங்கணுமா
இந்த திட்டம் மூலம் சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு அரசு அலுவலர்களே நேரடியாக மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முகாம் இன்று (29.7.25) கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 77 மற்றும் 78யை சேர்ந்த மக்கள் பலனடையும் படி செல்வபுரம் ராமமூர்த்தி சாலை பகுதியில் உள்ள ஆர்.ஆர்.மஹால், திருமண மண்டபத்தில் நடைபெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications