பெரியார் மீது காவி பூசிய அருண் கிருஷ்ணன் தே.பா சட்டத்தில் கைது - மத்திய சிறையில் அடைப்பு
பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியதாக கைது செய்யப்பட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.
கோவை: பெரியார் சிலை மீது காவி பூசி அவமதித்ததாக கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணனை குனியமுத்தூர் காவல்துறையினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
Recommended Video
கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றிய அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமதித்தவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார்
சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரியார்
சிலை அவமதிப்பு தொடர்பாக ஒருவர் போத்தனூர் போலீசில் சரணடைந்தார்.
சரணடைந்தவர் அருண் கிருஷ்ணன், பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். அவர் மீது குனியமுத்தூர் காவல்துறையினர் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கந்த சஷ்டி கவசத்தை அவமதித்து கருப்பர் கூட்டம் வீடியோ பதிவிட்டதால் முருக பக்தராகிய தான் மனதளவில் புண்பட்டதாகவும், இதனையடுத்தே பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியதாகவும் அருண் கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயல்பட்ட அருண் கிருஷ்ணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதனையடுத்து அருண் கிருஷ்ணனை குனியமுத்தூர் காவல்துறையினர் நேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கான ஆணையை நேற்று மாலை சிறைத்துறை நிர்வாகத்திடம் வழங்கினர்.
கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கருப்பர் கூட்டம் செந்தில் வாசன், சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், பெரியாரை அவமதித்த அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications