கோவை பில்லூர் அணை திறப்பு! பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோயம்புத்தூர்: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளதால், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூரின் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் திறக்கப்படுகிறது.
பில்லூர் அணை நள்ளிரவு திறக்கப்படுவதால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை இருக்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 100 அடி. இதில் 97.5 அடியை நீர் எட்டினால் உடனடியாக பவானி ஆற்றில் நீர் திறந்து விடப்படும். கடந்த சில நாட்களாக 70 அடிக்கும் குறைவாக இந்த அணையில் நீர் இருந்து வந்த நிலையில் மழை காரணமாக 24ம் தேதி அணையின் நீர் மட்டம் 78 அடி உயர தொடங்கியது. அதேபோல நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
எனவே அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 86 அடியாக உயர்ந்தது. அதேபோல அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 3 கனஅடி என்கிற அளவில் இருந்தது. இதே வேகத்தில் தண்ணீர் வந்தால் நிச்சம் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று கருதப்பட்டிருந்தது. நீர் வரத்து அதிகரித்ததால் மின் உற்பத்திக்கு விநாடிக்கு 6,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டிருந்தது. எனவே பவானி ஆற்றில் யாரும் இறங்கவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. எனவே அணையிலிருந்த நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையின் 2 மதகுகள் திறக்கப்படும் என்பதால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல கோவையின் மற்றொரு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவானி அணையும் வேகமாக முழு கொள்ளளவை எட்டி வருகிறது. அணையின் உயரம் 50 அடியாக இருந்தாலும், அணையின் பாதுகாப்பு கருதி 44.61 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர் மட்டம் 19 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 21.55 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. நாளையும் கோவையில் கனமழை பெய்யும் என்பதால் அணையின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications