காமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு
கோவை: காமராசருக்குப் பிறகு, இன்றுதான் இந்தியாவுக்கு ஒரு தலைவர் (மோடி) கிடைச்சிருக்காரு. உலக நாடுகள் எல்லாம் இப்ப இந்தியாவின் பெயரை பயந்து உச்சரிக்கின்றன. என இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.
பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கோவை சிங்காநல்லூரில் இன்று கொண்டாட்டம் நடந்தது. இதில் குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கான பரிசுகள் வழங்கும் விழாவும் நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங் கி மாணவர்கள் மத்தியில் பேசினர்.

உலக நாடுகள் பயப்படுகின்றன
அப்போது பேசிய கஸ்தூரி ராஜா, நம்முடைய அணுகுமுறை, நடை, உடை, பாவனை, பேச்சு இதெல்லாம் தான் நம்மை ஹீரோவாக மாற்றுகிறது. இன்று இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்தத் தலைவர்களுடைய பட்டிலை எடுத்து பார்த்தோம்ணா, . காமராசருக்குப் பிறகு, இன்றுதான் இந்தியாவுக்கு ஒரு தலைவர் (மோடி) கிடைச்சிருக்காரு. உலக நாடுகள் எல்லாம் இப்ப இந்தியாவின் பெயரை பயந்து உச்சரிக்கின்றன.

டிரம்ப் குழந்தை மாதிரிகேட்குறாரு
அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகின்ற போது, வல்லசு நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் ஒரு குழந்தை மாதிரி கேட்டுக் கொண்டிருக்கிறாரு. எல்லாருக்கும் பயம் வந்திடுச்சு, இப்ப எந்த விஷயத்திலும் இந்தியாவை அசைச்சுக்க முடியாது.

குழந்தைகள் சொன்னாங்க
மாணவர்களிடம் இருந்துதான் சீர்திருத்தங்கள் நடக்கணும். அவர்களால்தான் இந்தியாவை மாற்றியமைக்க முடியும். நம்முடைய விஞ்ஞான வளர்ச்சியும் மோடியின் அறிவுப் புகழும் எனக்குத் தெரியவில்லை. என் குழந்தைகள்தான் எனக்குத் தெரியப்படுத்துனாங்க..

தமிழ்நாட்டில் மாற்றம்
நீங்களும் உங்களின் பெற்றோரிடம் சென்று, மோடியை பற்றி பேசுங்க. இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்று அவங்க கிட்ட தெரியப்படுத்துங்க . தமிழ்நாட்டில் இப்போது மாற்றம் வரவில்லையெனில், எந்த ஜென்மத்திலும் வராது'' இவ்வாறு கூறினார்.

ஞானவேல் ராஜா பேச்சு
இதே விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில் "மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பது போல் தெரியவில்லை; மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் தவறு கிடையாது. நாட்டில் பொதுமொழி ஒன்று இருப்பது அவசியம்; ஒரு மொழியால் இன்னொரு மொழி அழியும் என ஒரு கும்பல் தவறாக பிரச்சாரம் செய்யுறாங்க. 90% தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரியவில்லை; அதற்கு மொழியும் ஒரு காரணம். பிரதமர் நரேந்திர மோடி பேச்சை மொழி மாற்றம் செய்ய உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்" இவ்வாறு கூறினார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications