கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்.. முபினின் உறவினர் இரவோடு இரவாக கைது
கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 6ஆவதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4.10 மணிக்கு சென்ற கார் ஒன்று சங்கமேஸ்வரர் கோயில் முன்பு வேகத்தடையை கடந்த போது திடீரென வெடித்து தீப்பிடித்தது.
இந்த காரில் இரு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும் அந்த தீவிபத்தில் காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

உதிரிபாகங்கள்
சம்பவ இடத்தில் சிதறி கிடந்த காரின் உதிரிபாகங்கள், அங்கு சிதறிக் கிடந்த ஆணிகள், கோலிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முபினின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், வயர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிசிடிவி காட்சிகள்
முபின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் 22 ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு முபினின் வீட்டில் இருந்து முபின் மற்றும் மேலும் 5 பேர் ஒரு பெரிய மூட்டையை தூக்கி சென்று காரில் ஏற்றும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவை வெடி பொருட்களா, அவற்றை எங்கே ஏற்றிச் சென்றனர் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முபின்
இந்த நிலையில் முபினுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் முபினின் வீட்டில் இருந்து மூட்டையை தூக்கிச் சென்றவர்கள்.

மேலும் ஒருவர் கைது
கார் வெடிப்பில் உயிரிழந்த முபின், முகமது அசாருதீனின் நெருங்கிய கூட்டாளியாவார். முகமது அசாருதீன் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் ஆவார். இந்த நிலையில் இந்த வழக்கில் 6ஆவதாக அஃப்சர்கான் என்பவரை இரவோடு இரவாக போலீஸார் கைது செய்தனர். இவர் முபினின் உறவினராவார்.
-
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications