Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கும் லோக்சபா தேர்தல்.. கோவையில் தபால் வாக்குகளை செலுத்த காவல்துறையினர் தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் அஞ்சல் ஓட்டு செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் 39 தொகுதிகளும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே, வேட்பாளர்கள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம் தேர்தல் பணிக்காக ஏராளமான காவலர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் காவலர்களுக்கான தபால் ஓட்டு தொடங்கியிருக்கிறது.

Police officers engaged in election duty are distributing postal votes in Coimbatore

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர்கள் சமுதாயக் கூடத்தில் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கியது. கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் இன்றும், நாளையும், தங்களது அஞ்சல் வாக்கை செலுத்த இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கோவை,பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்டவர்கள் கோவை உப்பிலிபாளையம் காவலர் சமுதாயக்கூடத்திலும் மற்ற தொகுதிகளுக்கு உட்பட்டவர்கள் அதற்கு எதிரேயுள்ள சிஎஸ்ஐ பள்ளியிலும் வாக்களிக்க மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் நேரில் வந்து அஞ்சல் வாக்கு செலுத்தி விட்டு செல்கின்றனர். வாக்குப்பதிவானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் கோவை தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை, இந்த தொகுதியின் எம்.பி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ஏற்கெனவே தமிழக அரசு மீது ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்த இவர் மீது, ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை என்று விமர்சனம் இருந்து வருகிறது.

எனவே, இந்த தேர்தல் இவருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. மட்டுமல்லாது கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்ததால் 4 சட்டமன்ற தொகுதிகளை பாஜகவால் கைப்பற்ற முடிந்தது. இந்த முறை அதிமுக தனித்து களம் காண்கிறது என்பதால் பாஜகவுக்கு இத்தேர்தல் கூடுதல் சவாலானதாக இருக்கிறது.

அதேபோல மறுபுறும் திமுகவுக்கும் கோவை தொகுதி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இங்கு பணியாற்றி வந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை மூலம் பாஜக தட்டி தூக்கியது. இப்போதுவரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே இதற்கு பழிதீர்க்க கோவையில் திமுக நேரடியாக களமிறங்கியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இந்த தொகுதி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது.

அந்த வகையில் கோவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு திமுக சார்பில், கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.

இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம், திமுகவினர் மீது தாக்குதல், திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முயன்ற திருமுருகன் காந்தி தடுத்து நிறுத்தம், என கோவை அரசியல் சூட்டில் தகித்து வருகிறது. இதனை தணிக்க கூடுதல் போலீசார் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த போலீசார்தான் தற்போது தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+