தொடுடா பார்க்கலாம்.. சனாதனம் உயிர் மூச்சு! கோவையில் போஸ்டர் யுத்தம்.. போட்டது பாருங்க போலீஸ் ஆர்டர்!
கோவை: சனாதன விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் பாஜக மற்றும் திமுக இடையே போஸ்டரில் சண்டை நடைபெற்று வந்த நிலையில் சமூக மோதலை தூண்டும் வகையில் போஸ்டர்களை அடிக்கும் அச்சகங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை பேசிய பேச்சுகள்தான் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக புகார்கள் குவிந்து கிடக்கின்றன. அது போல் கண்டனங்களும் எழுகின்றன. சனாதனத்தை டெங்கு, கொரோனா, மலேரியா போல் ஒழித்துக் கட்ட வேண்டும் என கூறியது இந்து அமைப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த நிலையில்தான் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவினால் ரூ 10 கோடி சன்மானம் என அறிவித்து, அவருடைய புகைப்படத்தை வாளால் ஆக்ரோஷமாக கிழித்த வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இதற்கு திமுகவினர் கொந்தளித்து விட்டனர்.
ஆனால் உதயநிதியோ கூலாக தலையை சீவ 10 கோடிக்கு எதற்கு 10 ரூபாய் சீப்பு போதும் என கிண்டலாக கூறியுள்ளார். இந்த நிலையில் மக்களிடம் கொலைவெறியை தூண்டும் விதமாக சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக உள்பட திராவிட இயக்கங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையர், காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக சமூகவலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்கள் குவிகின்றன. அது போல் சாமியார் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என இந்து அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும் பாஜகவினர் இது குறித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
திமுக சார்பில் "போலிச்சாமியாரே 100 கோடி தரோம் தொடுடா பார்க்கலாம்" என ஒருமையில் இடம்பெற்ற வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கு பதிலடியாக பாஜகவினர் "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் டவுன்ஹால், லங்கா கார்னர், ரயில் நிலையம் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் சாமியாருக்கு எதிராக உருவபொம்பை எரிப்பு போன்ற செயல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இது போன்று வன்முறையை தூண்டும் விதத்தினாலான போஸ்டர்கள் போலீஸாரின் கவனத்திற்கு சென்றன. இதையடுத்து அவர்கள் இந்த செயல்களுக்கு கடிவாளம் போட்டுள்ளனர். அதாவது சமூக மோதலை தூண்டும் வகையில் போஸ்டர்களை அடிக்கக் கூடாது. அப்படியே யாராவது கொடுத்தாலும் அதை அடித்தால் அந்த அச்சகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
அரசியலுக்கு வர்றாங்க மு.க.அழகிரி மகள்? கனிமொழிக்கு பின் கயல்விழி Entry.. மாமதுரையே பத்திக்கிச்சு! -
தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? திமுகவிடம் வேல்முருகன் வைத்த டிமாண்ட்! -
ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராகுலின் நம்பிக்கை நட்சத்திரம்.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? -
அரசியல் வரலாறே தெரியாமல் பேசி.. அம்பலப்பட்ட விஜய்! திமுக இருமுறை தொடர்ந்து ஜெயித்தது அறியாத பரிதாபம் -
அதிமுக vs திமுக.. தொழில் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன? டேட்டாவுடன் வந்த டிஆர்பி ராஜா! -
ஆளுநர் ரவி, குஷ்பு குறித்து அவதூறு பேச்சு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை நிறுத்தம் -
5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்.. தெலுங்கானாவில் இருந்து MP ஆகும் அபிஷேக் சிங்வி! -
நிதிஷ்குமார் முதல்வர் பதவி காலி.. ஆரம்பித்த பாஜக! அதிமுகவுக்கு அச்சம்.. எடப்பாடிக்கும் இதே கதி தானா! -
திருச்சி சிவா, சல்மா, திலக்.. ராஜ்ய சபாவில் ஆதிக்கம் செலுத்தும் திருச்சி.. அள்ளிக் கொடுக்கும் திமுக! -
டெல்லிக்கு போகும் விஜயகாந்த் மச்சான்.. தேமுதிகவின் முதல் எம்.பி.. யார் இந்த எல்.கே. சுதீஷ்? -
திருப்பூர்,கோவை தொழில் முனைவோருக்கு புதிய நெருக்கடி.. ரத்து செய்யப்படும் ஆர்டர்கள்.. என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications