Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒருபக்கம் கோடநாடு: இன்னொருபக்கம் பொள்ளாச்சி: 4 பேரை வளைத்த சிபிஐ: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோடநாடு வழக்கு ஒரு பக்கம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடம் மீண்டும் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு போலவே கடந்த அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் சர்ச்சையானது பொள்ளாச்சி பாலியல் வழக்கு.

பொள்ளாச்சியில் 2019ம் ஆண்டு பல கல்லூரி மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்து, அவர்களை மிரட்டி கும்பல் ஒன்று பணம் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கு

வழக்கு

திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட பலர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதோடு இந்த வழக்கில் அதிமுகவினர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக முயன்று வருவதாகவும் திமுக குற்றச்சாட்டு வைத்தது. அதோடு ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் திமுக தெரிவித்து இருந்தது.

சிபிஐ

சிபிஐ

ஆனால் அதற்கு முன் பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த சிபிஐ போலீசார் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது.

விசாரணை

விசாரணை

இந்த நிலையில்தான் இந்த வழக்கில் கடந்த வருட இறுதியில் 3 பேர் அதன்பின் சில நாட்களுக்கு முன் ஒருவர் என்று மொத்தம் 4 பேர் கூடுதலாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் நண்பர்கள். திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் கொடுத்து வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Recommended Video

    MK Stalin உத்தரவு! | Pollachi, Kodanad Case-ஐ கையில் எடுக்கும் அதிகாரிகள் | Oneindia Tamil
    ஆதாரங்கள்

    ஆதாரங்கள்

    கைது செய்யப்பட்ட அருண்குமார், அருளானந்தம், பாபு, சரண்பால் இந்த நான்கு பேருக்கும் எதிரான கூடுதல் வீடியோ ஆதாரங்களும், தொலைபேசி ஆதாரங்களும் திரட்டப்பட்டன. இந்த நிலையில் அருண்குமார், அருளானந்தம், பாபு, சரண்பால் ஆகிய நால்வருக்கும் எதிராக இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் விசாரணை சூடு பிடித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+