ஒருபக்கம் கோடநாடு: இன்னொருபக்கம் பொள்ளாச்சி: 4 பேரை வளைத்த சிபிஐ: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோடநாடு வழக்கு ஒரு பக்கம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடம் மீண்டும் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு போலவே கடந்த அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் சர்ச்சையானது பொள்ளாச்சி பாலியல் வழக்கு.
பொள்ளாச்சியில் 2019ம் ஆண்டு பல கல்லூரி மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்து, அவர்களை மிரட்டி கும்பல் ஒன்று பணம் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கு
திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட பலர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதோடு இந்த வழக்கில் அதிமுகவினர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக முயன்று வருவதாகவும் திமுக குற்றச்சாட்டு வைத்தது. அதோடு ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் திமுக தெரிவித்து இருந்தது.

சிபிஐ
ஆனால் அதற்கு முன் பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த சிபிஐ போலீசார் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது.

விசாரணை
இந்த நிலையில்தான் இந்த வழக்கில் கடந்த வருட இறுதியில் 3 பேர் அதன்பின் சில நாட்களுக்கு முன் ஒருவர் என்று மொத்தம் 4 பேர் கூடுதலாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் நண்பர்கள். திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் கொடுத்து வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

ஆதாரங்கள்
கைது செய்யப்பட்ட அருண்குமார், அருளானந்தம், பாபு, சரண்பால் இந்த நான்கு பேருக்கும் எதிரான கூடுதல் வீடியோ ஆதாரங்களும், தொலைபேசி ஆதாரங்களும் திரட்டப்பட்டன. இந்த நிலையில் அருண்குமார், அருளானந்தம், பாபு, சரண்பால் ஆகிய நால்வருக்கும் எதிராக இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் விசாரணை சூடு பிடித்துள்ளது.
-
3 மாத கர்ப்பிணி மனைவி தூங்கும் போது சுத்தியலால் அடித்து கொலை! தலைமறைவாக இருந்த காதல் கணவர் கைது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications