Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் நாளை மின்தடை.. காலை 9 மணி முதல் 5 மணி வரை 'பவர்கட்'.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் மின் வாரியம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணியின் காரணமாக கோவையில் சீரநாயக்கன்பாளையம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் மாதம்தோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.

coimbatore power cut

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் நாளை (செப்டம்பர் 19 ஆம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவையில் செப்டம்பர் 19 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை ஏற்படுகிறது. மாலை 5 மணிக்கு பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒரு பகுதி, செல்வபுரம், அண்ணா நகர், ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் வடவள்ளி ரோடு ஒரு பகுதி.

குறிச்சி துணை மின் நிலையம்: எம்.ஜி.ஆர்.நகர், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், ஹவுசிங் யூனிட் பேஸ் 1 ரோடு, ரத்தினம் கார்டன், நாடார் காலனி, முத்தையா நகர், நுாராபாத், சக்தி நகர், சாரதா மில் ரோடு, காந்தி நகர், சி.டி.யூ., காலனி, சீனிவாசன் நகர், மதுக்கரை மார்க்கெட் ரோடு, லோகநாதபுரம், சாய் நகர், கே.ஆர்.கோவில், அம்மன் நகர்.

கோல்டன் நகர், பழனியப்பா நகர், காந்தி நகர், எம்.ஜி.ஆர்.நகர் விரிவாக்கம், சிட்கோ மற்றும் எல்.ஐ.சி., காலனி ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+