கோவையில் பரபரப்பு! ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி ரெய்டு.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
கோவை: கோவை ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத எட்டு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பணியாற்றும் 20 பேருக்குப் பணி நிரந்தரம் செய்ய உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை ஆவின் அலுவலக தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
பச்சாபாளையத்தில் அமைந்துள்ள இந்த ஆவின் அலுவலகத்தில் கணக்கில் வராத எட்டு லட்ச ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சீனியர் பேக்டரி உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ.8 லட்சத்தைப் பறிமுதல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications