அடடா இதுதாங்க ஸ்பீடு.. கோயம்புத்தூரின் அடையாளத்தையே மாற்றும்.. அசத்தல் திட்டம்.. கலக்கும் தமிழக அரசு
கோயம்புத்தூர்: கோவையில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட செம்மொழி பூங்காவிற்கான கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடைசி 20 சதவிகித பணிகள் மட்டுமே மீதம் உள்ளன. 80 சதவிகிதம் முடிந்துள்ளது. இந்த திட்டம் தொடங்கி வெறும் 4 மாதங்களில் கட்டுமானம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள 165 ஏக்கர் சிறை மைதானத்தில் பூங்கா கட்டம் வாரியாக அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக கோவை மத்திய சிறைச்சாலையில் பயன்படுத்தப்படாத 45 ஏக்கர் நிலம் பகுதியில் இந்த பூங்கா அமைய உள்ளது. 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கடந்த ஜூன் 28ம் தேதி பூங்காவுக்கான டெண்டர் திறக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கு ஏலம் கோரப்பட்டது.
அதற்குள் வேக வேகமாக பணிகள் 40 சதவிகிதம் முடிந்துள்ளது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மல்டி லெவல் கார் பார்க்கிங், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தண்ணீர் சேமிப்பு வசதிகள், அனுபவ மையம், சிற்றுண்டிச்சாலை மற்றும் திறந்தவெளி தியேட்டர் ஆகியவை திட்டத்தில் உள்ளன என்று ஆணையர் கூறியுள்ளார். சென்னையில் உள்ளதை விட பிரம்மாண்டமாக இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.

சென்னை பூங்கா
சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இது சென்னை அண்ணா சாலையில், ஜெமினி பாலம் கீழே அமைந்து இருக்கிறது. இதற்கு தினமும் நூற்றுக்கணக்கில் மக்களும், காதல் ஜோடிகளும் வருவதுண்டு.
இந்த பூங்கா கடந்த 2010ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த பூங்கா, அந்த பகுதியில் இருந்த தனியார் ஹோட்டலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகும். அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி, இந்த பூங்காவை அமைத்தது.
பணிகள் தீவிரம்
இந்த நிலையில்தான் கோவையில் அமைய உள்ள பிரம்மாண்ட செம்மொழி பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது.
தோட்டங்கள் - மூலிகை, சிற்பங்கள் கொண்ட கல், மரபணு ஆராய்ச்சி, பாரம்பரியம் மற்றும் மரங்களைக் கொண்ட மரங்கள் 'இசைத் தோட்டம்' எனப்படும் இசைக்கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இவை எல்லாம் தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையின் உதவியுடன் நிறுவப்பட்டு பராமரிக்கப்படும். கூறினார்.
மாநகராட்சியின் கூற்றுப்படி, காந்திபுரம் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவுதல், சிற்பங்கள் நிறுவுதல் மற்றும் சிறிய மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு ₹93.448 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் உக்கடத்தில் உள்ள கோயம்புத்தூர் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை பூங்காவிற்கு பைப்லைன் அமைக்கும் பணிகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு ₹7.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ளதை விட பிரம்மாண்டமாக இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது . மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் 1,000 சதுர அடியில் செம்மொழி பூங்கா பல்நோக்கு மாநாட்டு மையம், அட்ஜஸ்ட் செய்ய கூடிய இருக்கை ஏற்பாடுகளுடன் ₹25.56 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications