4 மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்த செந்தில் பாலாஜி! கோவை மாவட்ட திமுகவில் குஸ்தி!
கோவை: கோவை திமுகவில் 4 மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்திருக்கிறார் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி.
மருதமலை சேனாதிபதி, ராமச்சந்திரன், கிருஷ்ணன் என்ற பையா கவுண்டர், டாக்டர் வரதராஜன் ஆகிய 4 பேருக்கும் ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ள அவர், சிங்காநல்லூர் கார்த்திக்கிற்கு மட்டும் மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இதனிடையே தளபதி முருகேசன் என்பவரை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியிடத்துக்கும் தொண்டாமுத்தூர் ரவியை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கும் வேட்புமனு கொடுக்க வைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி.

கோவை திமுக
கடந்த 2020ஆம் ஆண்டு கோவை மாவட்ட திமுகவானது 5 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக வரதராஜன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மருதமலை சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கார்த்திக், கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுபாளராக பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் ஆகியோர் பதவி வகித்து வந்தனர்.

3 ஆக குறைப்பு
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த வாரம் வெளியிட்டஅறிவிப்பில், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என மூன்றாக மட்டும் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை கிழக்கு, கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு ஆகிய அமைப்பு முறைகள் அடியோடு நீக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போதுள்ள 5 மாவட்ட பொறுப்பாளர்களில் இருவரது பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்பட்டது.

4 பேருக்கு கல்தா
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 மாவட்டச் செயலாளர்களில் கார்த்திகை தவிர மற்ற 4 மாவட்டச் செயலாளர்களுக்கும் ஓய்வு கொடுக்க முடிவெடுத்துவிட்டார் செந்தில் பாலாஜி. அந்த வகையில் புதிதாக திருத்தியமைக்கப்பட்ட கோவை தெற்கு மாவட்ட திமுகவுக்கு தளபதி முருகேசன் என்பவரையும், கோவை வடக்கு மாவட்ட திமுகவுக்கு தொண்டாமுத்தூர் ரவி என்பவரையும், கோவை மாநகர் திமுகவுக்கு சிங்காநல்லூர் கார்த்திக்கையும் வேட்பு மனு கொடுக்க வைத்துள்ளார் செந்தில் பாலாஜி.

ராமச்சந்திரன்
இதனிடையே கோவை வடக்கு மாவட்டத்துக்கு தற்போதைய மாவட்டச்செயலாளரான சி.ஆர்.ராமச்சந்திரன் பணம் கட்டி வேட்பு மனு கொடுத்துள்ளார். மாவட்டச் செயலாளர் பதவி இல்லையென்றால் வேறு ஏதேனும் முக்கியப் பதவியை தலைமையிடம் எதிர்பார்த்து அவர் போட்டியில் குதித்துள்ளார். இதனால் கோவை மாவட்ட திமுகவில் அடுத்தடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications