கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு: சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி கருத்து!
கோவை: கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு என கோவை நாகசக்தி அம்மன் பீடம் சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் தினசரி பாதிப்பு 38 ஆயிரத்தை தாண்டி கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தளர்வுகளற்ற ஊரடங்கால் தற்போது குறைந்த வண்ணம் இருக்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த நிலையில் கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

கொரோனா தேவிக்கு சிலை
கோவை ஒண்டிபுதூர் பகுதியில் காமாட்சிபுரி ஆதீன மடத்தில் கொரோனா தேவிக்கு சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 48 நாட்கள் நடைபெறும் இந்த யாக பூஜைக்கு பின்னரே பொதுமக்களுக்கு வழிபட அனுமதி அளிக்கப்படும் என காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியுள்ள நிலையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு என சிவசண்முக சுந்தர பாபுஜி தெரிவித்துள்ளார்.

சித்தர்
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ளது நாகசக்தி அம்மன் பீடம் இந்த பீடத்தை சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் பரவல்களின் போது நிலவேம்பு கசாயம், பப்பாளி இலை சாறு போன்றவற்றை வழங்கி வந்தார்.

கொரோனா தொற்று
தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே கபசுர குடிநீர், மூலிகை கசாயம் போன்றவற்றை பொது மக்களுக்கு வழங்கி வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் தமிழக அரசு சித்த வைத்தியத்திற்கு முழு அனுமதி அளித்தால் தமிழ்நாட்டில் கொரோனா நோயாளி உயிரிழப்பு இல்லாமல், கொரானா தொற்றை முழுமையாக ஒழித்துவிட முடியும்.

ஆயுர்வேதா
சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவம் மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
மேலும் கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்து இருப்பது தவறு எனவும், கொரோனா சம்கார தேவிக்குதான் உண்மையில் சிலை வைத்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications