கோவையில் செருப்பு கடை மீது தாக்குதல்.. அடுத்து கமல் செய்த சபாஷ் காரியம்.. வாயடைத்து போன பாஜக
கோவை: கோவையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையையொட்டி பாஜகவினர் நேற்று பேரணி நடத்தினர் அப்போது திடீரென ஒரு செருப்பு கடையை மூடச்சொல்லி மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கல் விசி தாக்கப்பட்ட கடைக்கு சென்று புதிய செருப்பு வாங்கினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். அத்துடன் பூத் கமிட்டிக்கு ஆட்களை நியமிப்பதிலும் பிஸியாக உள்ளனர்.
கோவை தெற்கு தொகுதியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அந்த தொகுதி குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது அங்கு பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும், அம்மா மக்கள்முன்னேற்ற கழகம் தரப்பில் சேலஞ்சர் துரையும், நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

லிப் சர்வீஸ்
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கும், வானதி சீனிவாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்டோவில் பிரச்சாரம், நடைபயணம் செய்து பிரச்சாரம் என போட்டு போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வார்த்தை மோதலும் கடுமையாக உள்ளது. வானதி சீனிவாசனை கமல்ஹாசனின் கட்சி துக்கடா தலைவர் என்று கூற, பதிலுக்கு வானதி, கமல் லிப் சர்வீஸ் செய்பவர் என்று விமர்சனம் செய்தார். இந்த பிரச்சாரங்கள் மக்களை முகம்சுளிக்க வைத்துள்ளது.

பாஜகவினர் பேரணி
இது ஒருபுறம் எனில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். அவரது வருகையையொட்டி பாஜகவினர் கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பேரணி நடத்தினர்.

கண்டனங்கள் குவிகிறது
கோவை டவுன்ஹால் பகுதியில் நேற்று பாஜகவினர் நடத்திய இரு சக்கர வாகன பேரணியின்போது, செருப்பு கடை ஒன்றின் மீது சிலர் கல் வீசி தாக்கினார்கள் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

புது செருப்பு வாங்கினார்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை டவுன்ஹால் பகுதிக்குச் சென்றார். அங்கே கல் வீசி தாக்கப்பட்ட கடைக்குச் சென்ற அவர், கடை உரிமையாளர்களிடம் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அதே கடையில் புதிய செருப்பு ஒன்றை வாங்கினார். அத்துடன் நடந்த சம்பவத்திற்காக கடும் கண்டனம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications