கோவையில் திடீரென தீப்பற்றி எரிந்து 108 ஆம்புலன்ஸ்.. நோயாளியை இறக்கிவிட்ட சற்று நேரத்தில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறக்கிவிட்ட சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் திடீரென தீ பிடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் இன்று காலை ESI மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் 108 ஆம்புன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

 Sudden fire in Ambulance as Oxygen cylinder exploded in Coimbatore

அந்த நோயாளியை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் திடீரென தீ பிடித்தது. அதிலும், அந்த ஆம்புன்ஸ் கொரோனா சிகிச்சைப் பிரிவு உள்ள இடத்தின் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த பாதுகாலவர்கள் அருகிலிருந்த தீ அணைப்பான்களை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்துத் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும், அதற்குள்ள ஆம்புலன்ஸ் வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

அந்த ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றும்போது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்த ஊழியர்களும், நோயாளிகளும் உடனடியாக வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேநேரம் உரியப் பராமரிப்பு இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+