தூத்துக்குடி, திருப்பூரை தொடர்ந்து கொரோனா சிகிச்சை பெற்ற கோவை பெண் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!
கோவை: தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களைத் தொடர்ந்து கோவையில் கொரோனாவால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற திருச்சி இளைஞர் உயிரிழந்தார். பெங்களூரில் பணிபுரிந்த நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் திருச்சியில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருப்பூரில் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சத்தால் பொது இடங்களில் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனை வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 198 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் அதிகபட்சமாக 63 பேருக்கும் செங்கல்பட்டில் 25 பேருக்கும் கோவையில் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. தமிழ்நாட்டில் நேற்று 3558 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 105 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1086. தமிழ்நாட்டில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,050.
தமிழ்நாட்டில் மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 8 மாவட்டங்களில் கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த போதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவை இல்லை என ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications