ஆஹா.. செம ஸ்பீடா இருக்காங்களே.. கோயம்புத்தூரின் இதயத்தில் வரும்.. தரமான சம்பவம்.. மக்கள் குஷி
கோயம்புத்தூர்: கோவையில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட செம்மொழி பூங்காவிற்கான கட்டுமானம் 40 சதவிகிதம் முடிந்துள்ளது. 3 மாதங்களில் கட்டுமானம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.
சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது சென்னை அண்ணா சாலையில், ஜெமினி பாலம் கீழே அமைந்து இருக்கிறது. இதற்கு தினமும் நூற்றுக்கணக்கில் மக்களும், காதல் ஜோடிகளும் வருவதுண்டு.

இந்த பூங்கா கடந்த 2010ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த பூங்கா, அந்த பகுதியில் இருந்த தனியார் ஹோட்டலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகும். அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி, இந்த பூங்காவை அமைத்தது.
பணிகள் தீவிரம்
இந்த நிலையில்தான் கோவையில் அமைய உள்ள பிரம்மாண்ட செம்மொழி பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது.
டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள 165 ஏக்கர் சிறை மைதானத்தில் பூங்கா கட்டம் வாரியாக அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக கோவை மத்திய சிறைச்சாலையில் பயன்படுத்தப்படாத 45 ஏக்கர் நிலம் பகுதியில் இந்த பூங்கா அமைய உள்ளது. 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கடந்த ஜூன் 28ம் தேதி பூங்காவுக்கான டெண்டர் திறக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கு ஏலம் கோரப்பட்டது.
அதற்குள் வேக வேகமாக பணிகள் 40 சதவிகிதம் முடிந்துள்ளது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஏகப்பட்ட வசதிகள்
தோட்டங்கள் - மூலிகை, சிற்பங்கள் கொண்ட கல், மரபணு ஆராய்ச்சி, பாரம்பரியம் மற்றும் மரங்களைக் கொண்ட மரங்கள் 'இசைத் தோட்டம்' எனப்படும் இசைக்கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இவை எல்லாம் தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையின் உதவியுடன் நிறுவப்பட்டு பராமரிக்கப்படும்.
மாநகராட்சியின் கூற்றுப்படி, காந்திபுரம் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவுதல், சிற்பங்கள் நிறுவுதல் மற்றும் சிறிய மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு ₹93.448 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் உக்கடத்தில் உள்ள கோயம்புத்தூர் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை பூங்காவிற்கு பைப்லைன் அமைக்கும் பணிகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு ₹7.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ளதை விட பிரம்மாண்டமாக இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது . மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் 1,000 சதுர அடியில் செம்மொழி பூங்கா பல்நோக்கு மாநாட்டு மையம், அட்ஜஸ்ட் செய்ய கூடிய இருக்கை ஏற்பாடுகளுடன் ₹25.56 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மல்டி லெவல் கார் பார்க்கிங், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தண்ணீர் சேமிப்பு வசதிகள், அனுபவ மையம், சிற்றுண்டிச்சாலை மற்றும் திறந்தவெளி தியேட்டர் ஆகியவை திட்டத்தில் உள்ளன என்று ஆணையர் கூறியுள்ளார். சென்னையில் உள்ளதை விட பிரம்மாண்டமாக இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது .
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications