கோவையில் இன்று ஆசிய ஜவுளி மாநாடு தொடங்குகிறது! மாநாட்டில் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்
கோயம்புத்தூர்: கோவையில் இன்று ஆசிய ஜவுளி மாநாடு தொடங்குகிறது. இதில் பங்கேற்க மத்திய மாநில அமைச்சர்கள் கோவைக்கு வருகை தர உள்ளனர்.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு சாா்பில் 'ஆசியா - 2025ம் ஆண்டுக்குப் பிறகு ஜவுளி உற்பத்தி மற்றும் நுகா்வோருக்கான உலகளாவிய மையம்' என்ற தலைப்பில் 11வது ஆசிய ஜவுளி மாநாடு கோவையில் இன்று தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாடு கோவையில் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். ஜவுளித் தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள், தொழில்முனைவோா்கள், விநியோகஸ்தா்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், ஜவுளித் தொழில் தொடா்பான உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் இன்று காலை 10.15 மணிக்கு இந்த மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளி, வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கோவைக்கு வருகிறார். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் ரேஸ்கோா்ஸ் சைமா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சைமாவின் நிறுவனத் தலைவா் ஆா்.கே.சண்முகம் செட்டியாரின் சிலையையும் அவர் திறந்து வைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில், ஜவுளி, ரயில்வே துறை இணையமைச்சா் தா்ஷனா வி.ஜா்தோஷ் கலந்து கொள்கிறாா்.
இதைத் தொடா்ந்து மாலை 6 மணியளவில் ஆசிய ஜவுளி மாநாட்டில் அமைச்சா் பியூஷ் கோயல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகிறாா். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சா்கள் சு.முத்துசாமி, ஆா்.சக்கரபாணி, ஆா்.காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (சிட்டி) தலைவா் டி.ராஜ்குமாா், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் ரவி சாம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.












Click it and Unblock the Notifications