அரசியல் செய்ய ஒன்றும் இல்லை... நல்லகண்ணு விவகாரத்தில் சரத்குமார் கருத்து
கோவை: அரசு குடியிருப்பு வீட்டில் இருந்து கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியேறிய விவகாரத்தில் அரசியல் செய்ய ஒன்றும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு, கடந்த 2007ம் ஆண்டு அரசு சார்பில், சென்னை தியாகராய நகர் சிஐடி நகரில் வீடு ஒதுக்கப்பட்டது. இந்த வீட்டை அரசு இலவசமாக தந்தாலும், நேற்று வரை வீட்டிற்கு வாடகை செலுத்தியே நல்லகண்ணு வசித்து வந்தார்.
ஆனால் அந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட உள்ளதால், அங்குள்ளவர்கள் வெளியேறுமாறு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதனை ஏற்றுகொண்டு, 12 ஆண்டுகாலமாக வசித்து வந்த வீட்டைவிட்டு மற்றவர்களை போல நல்லகண்ணுவும் சத்தமில்லாமல் வெளியேறி, கே.கே.நகரில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.

மாற்று வீடு
அப்போதும் தன்னை பற்றி கவலைப்படாத அவர், தாம் வசித்த அதே இடத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்திற்கு மாற்று வீடு வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

மாத வாடகைக்கு வீடு
இதற்கிடையே, மாற்று வீடு ஒதுக்கப்படாமல், உடனடியாக வெளியேற்றுவதா என்று திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் தங்களது எதிர்ப்பை காட்டினர். இந்தநிலையில், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு விளக்கம்
அரசு குடியிருப்பை நல்லகண்ணு ஒப்படைத்தது மற்றும் கக்கன் குடும்பத்தினர் இன்னும் ஒப்படைக்காதது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், சென்னை சிஐடி காலனி அரசு குடியிருப்பில் உள்ள 119 குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 2011ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் நோட்டீஸ்
இந்தநிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், வீட்டு வசதித்துறை மேம்பாட்டிற்காக அனைவருக்கும் நோட்டீஸ் கொடுத்தது போல், நல்லகண்ணுவிற்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அரசியல் செய்ய ஒன்றும் இல்லை
மேலும், நல்லகண்ணுவிற்கு மாற்று வீடு தரப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதால், அதில் அரசியல் செய்ய ஒன்றும் இல்லை என சரத்குமார் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications