கோவையில் பரபர..“பல இடங்களில் குண்டு வெடிக்கும்” - டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மெயில்! போலீஸ் விளக்கம்
கோவை: கோவை மாவட்டத்தின் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மெயிலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர், சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பட்டாசுகளை வெடித்து மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று அசம்பாவீதங்கள் ஏற்படாமல் பாதுகாப்புடன் மக்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் கோவை மாநகரம், கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவையில் டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்து உள்ளது. அதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் உஷாராகினர். இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொழுதுபோக்கு தளங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணி நேர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு, கோவையில் குண்டு வெடிக்கும் என்று வெளியான மின்னஞ்சல் வதந்தி என்று போலீசார் தெரிவித்து உள்ளார்கள்.
பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் மின்னஞ்சலை அனுப்பி பரபரப்பை கிளப்பியது யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி வரும் இந்த நாளில், குண்டு வெடிக்கும் என்று வந்த மிரட்டல் மெயிலால் கோவை முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications