திருச்சூர் ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையனுக்கு வலது கால் பறிபோனது.. கோவையில் சிகிச்சை
கோவை: கேரள மாநிலம் திருச்சூரில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் வழியாக தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த ஏ.டி.எம். கொள்ளையன் அசார் அலியின் வலதுகால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கோவையில் உள்ள மருத்துவமனையில் தற்போது கொள்ளையன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கோலழி பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்பட மொத்தம் 3 ஏடிஎம் மையங்களில் கடந்த வாரம் கொள்ளையடித்தது ஹரியாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல். அப்படி கொள்ளையடித்த ரூ.65 லட்சத்தை எடுத்துக்கொண்டு கன்டெய்னர் லாரியில் தப்ப முயன்றனர்.

இவர்கள் திருச்சூரில் இருந்து பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக தப்பி நாமக்கல் மாவட்டத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் குமாராபாளையம் அருகே கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, இன்ஸ்பெக்டர் தவமணியை தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பியோடினர். அப்போது, தற்காப்புக்காக ஜூமாந்தீன் என்பவனை இன்ஸ்பெக்டர் தவமணி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜூமாந்தீன் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்து போனான்.
மற்றொரு கொள்ளையன் அசார் அலி தப்பி ஓடும் போது போலீசார் அவனது காலிலும் சுட்டனர். இதில் 2 கால்களிலும் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த அசார்அலி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அதன் பிறகு அசார் அலியை மேல் சிகிச்சைக்காக போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தார்கள். கோவை அரசு மருத்துவமனையில் அசார் அலிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குமாரபாளையம் நீதிபதி மாலதி கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து அசார் அலியின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
இந்தநிலையில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த அசார் அலியின் வலதுகாலில், ரத்த குழாய் பாதிப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபட்டது. இதைத்தொடர்ந்து அசார் அலியின் உயிரை காப்பாற்றுவதற்காக அறுவை சிகிச்சை மூலம் நேற்று மாலை வலதுகால் முழங்காலில் இருந்து அகற்றினார்கள். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொள்ளையன் சிகிச்சை பெற்றுவருவதால் கோவை அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications